India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (நவ.23) மற்றும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை முதன்மை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஈரோட்டில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் நாளை (23.11.2024) திண்டல், பரிமளம் மஹாலில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் மண்டலம் 3ல் உள்ள மக்கள் மற்றும் 10, 19, 30, 31, 48, 49 ஆகிய வார்டுகளில் உள்ள மக்கள், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாநகராட்சி ஆணையாளர் மணிஷ், கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என இரு வனக் கோட்டங்களில் 10 வனச் சரகங்கள் உள்ளன. 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் தலமலை வனப் பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை படகு வீதியை பகுதி சேர்ந்த கல்லுரி மாணவர் கிரி (19). இவர் நாமக்கல் தனியார் கல்லுரியில் பயின்று வருகிறார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கிரி தன் தாய் லக்கேஸ்வரி-யிடம் நேற்று பரோட்டா கேட்டுள்ளார். அதற்கு இந்த நேரத்தில் பரோட்டா கிடைக்காது, என்று சொல்லி இருக்கிறார். இதனால் கோபித்துக் கொண்ட கிரி வீட்டினுள் சென்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
➤ சென்னிமலையில் கைத்தறி தொழில் முடக்கம் ➤ பஸ்சில் மருத்துவ மாணவியிடம் அத்துமீறல் ➤ பெருந்துறையில் ரூ.2.80 கோடிக்கு கொப்பரை ஏலம் ➤ ஈரோட்டில் கழுதை பால் விற்பனை ஆரம்பம் ➤ 32 அடியை எட்டிய வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ➤ அம்மாபேட்டையில் நாளை மின்நிறுத்தம் ➤ ஈரோடு மாணவர்கள் மாநில அளவில் சாதனை ➤ தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை ➤ ரூ.3.31 கோடி மதிப்பில் சுகாதார நிலையக் கட்டிடங்கள் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி 19 லட்சத்து 64,676 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 லட்சத்து 50,706 ஆண்கள், 11 லட்சத்து 1,378 பெண்கள், 3ம் பாலினத்தவர் 181 பேர் உள்ளனர். மேலும், 30 வயதுக்கு கீழ் இளம் வாக்காளர்கள் 3 லட்சத்து 22,466 பேர் உள்ளனர். மேலும், வரும் 23, 24 தேதியில் வாக்காளர் முகாம் நடக்க உள்ளது என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு அடுத்த கங்காபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. மின்தடை பகுதிகள்: கங்காபுரம், குமிளம்பரப்பு, டெக்ஸ்வேலி, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, சூரிப்பாறை, கொளத்துப்பாளையம், கரட்டுப்பாளையம், சடையம்பாளையம், கவுண்டன்பாளையம், தயிர்பாளையம், ஆலுச்சாம்பாளையம் மற்றும் பள்ளிபாளையம்.
தாளவாடியில், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கு மாபெரும் பொது மருத்துவ முகாம் (ஆசனூர் மைராடா வளாகம்) அரேபாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை பார்வையிட்டனர். உடன் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் பங்கேற்றனர்.
ஈரோட்டில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஆனந்தம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கான தடுப்பூசி, சமையல் கூடம், சமையல் பொருட்களின் இருப்பு, குழந்தைகளின் எடை, உயரம் பரிசோதனை ஆகியவற்றை பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.