Dindigul

News March 9, 2025

அதிமுக காணொளி கலந்தாய்வுக் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் நடைபெறும், கழக நிர்வாகிகள் பங்குபெறும், அனைத்து கழக மாவட்டங்களும் ஒரே சமயத்தில் இணையும் காணொளி கலந்தாய்வுக் கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர், நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அனைத்து முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News March 9, 2025

திண்டுக்கல்: நாட்டு வெடி வெடித்து ஒருவர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோம்பைபட்டியில் நாட்டு வெடி வெடித்து பாலமுருகன் என்பவர் உயிரிழந்தார். கடையின் மாடியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடியை வேறு இடத்துக்கு மாற்றியபோது வெடித்துச் சிதறியது. நாட்டு வெடி வெடித்து படுகாயம் அடைந்த கண்ணன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2025

பழனி: குஷ்பூ சுந்தர் சி குடும்பத்துடன் சாமி தரிசனம்

image

பழனி கோவிலில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி அவரது மனைவி குஷ்பூ மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பழனி அடிவாரத்தில் மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்தினார். குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோருக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது‌. தொடர்ந்து இன்று திருக்கோவிலில் சுந்தர் சி குஷ்பூ குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் வழங்க நிதி வழங்கப்பட்டது.

News March 9, 2025

சிலிண்டர் வெடித்து 4 பேர் காயம்

image

 கோபால்பட்டி எம். ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமசிவம் (54). இவரது மனைவி அன்னக்கிளி (48). இவர்களது வீட்டில் சில நாட்களாக சமையல் காஸ் எரியாமல் இருந்தது. இதுகுறித்து தனியார் காஸ் சிலிண்டர் நிறுவனத்தில் பரமசிவம் புகார் அளித்த நிலையில், மணி, ராஜா என ஊழியர்கள் சரி பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம் அடைந்தனர். (Share பண்ணுங்க)

News March 8, 2025

திண்டுக்கல் மக்களுக்கு அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருகிணைந்த போட்டித் தேர்வுகள் மையத்தில் போட்டித்தேர்வு நபர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர குறைந்தப்பட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி www.cecc.in என்ற இணையளத்தில் விண்ணப்பதை 25.03.2025க்குள் பதிவேற்றம் செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

News March 8, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ‘பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என உங்கள் அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்’ என்ற வாசகத்தை பதிவினை பதிவிட்டு விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 8, 2025

சுடு கஞ்சி ஊற்றி மாணவன் காயம்

image

திண்டுக்கல் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் மீது சுடு கஞ்சி ஊற்றி பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 8, 2025

திண்டுக்கல்லில் புதிய கமிஷனர் பதவி ஏற்றார்

image

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை திட்ட இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், திண்டுக்கல் புதிய கமிஷனராக மதுரை மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். மேலும், இவர் சிறந்த பணி ரெகார்டுகளை வைத்துள்ளார். இந்நிலையில் மதுரையில் துணை கமிஷனராக இருந்தவர், திண்டுக்கல் மாவட்டத்திற்கு கமிஷனராக பதவி ஏற்றார்.

News March 8, 2025

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல்லில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். (Share பண்ணுங்க.)

News March 8, 2025

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் 

image

மதுரையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் அம்மா, மகள், மகன் உட்பட 7 பேர் சிறுமலைக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். இந்நிலையில் சிறுமலையில் உள்ள ஒரு விடுதிதின் அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விடுதியை சேர்ந்த நபர்கள் அங்கு சாப்பிடக்கூடாது என தகராறில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டு, கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர். 

error: Content is protected !!