India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, “உங்கள் செல்போனில் புதிய செயலியை (Apps) பதிவிறக்கம் செய்யும்போது கவனம் தேவை, உங்கள் டேட்டா, தொடர்புகள் உள்ளே செல்ல அனுமதி கேட்டால் கொடுக்க வேண்டாம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இன்று டோல்கேட் திறக்கும் நிலையில் இருந்தது. இந்நிலையில் அதனை அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஊர் பொதுமக்கள் டோல்கேட்டை அடித்து உடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று 11-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை புதன்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை முதல் லேசானை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி கல்லூரி மாணவர்கள் நனைந்தபடி சென்றனர். மேலும், வேலைக்கு செல்லும் நபர்கள் கடும் சிரமம் அடைந்தனர். உங்க ஊரில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க. Share பண்ணுங்க
திண்டுக்கல் மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நில அளவை செய்யப்பட்ட பின் மனுதாரர் & அளவர் கையொப்பமிட்ட அறிக்கை / வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட, மனுதாரர் https://eservices.tn.gov.in/என்ற இணைய வழிச்சேவையின் மூலமாக பதிவிறக்கலாம் என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். Share பண்ணுங்க
திண்டுக்கல்லில் இன்று 10-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மேலும் இறந்தவர் யார் என்பதும் கொலை செய்தவர் யார் என்பதும் தற்போது வரை காவல்துறையினருக்கு தெரியாத பட்சத்தில் தீவிரமாக கொலையாளியை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல், வீரசின்னம்பட்டி பகுதியில் தோட்டத்தில் தொல்லை செய்த குரங்கை, நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, சமைத்துச் சாப்பிட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1000 கொடுத்து குரங்கை கொலை செய்யக் கூறிய தோட்ட உரிமையாளர் ராஜாராம் மற்றும் குரங்கைக் கொன்று சமைத்துச் சாப்பிட்ட ஜெயமணி இருவரையும் சிறுமலை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று (10.03.2025) தொழிற்பழகுநர் (PMNAM)-MAR-2025) சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12, ஐடிஐ. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்றலாம். ஊதியம் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். <
Sorry, no posts matched your criteria.