India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101, ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108, போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 , சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவரது ஜவுளிக்கடையில் ரூ.45,000 ரொக்கம் மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள துணிகளைத் திருடிய வழக்கில் சிவபாண்டி (30), அபினேஷ் (22) மற்றும் அருண்பாண்டி (24) ஆகிய மூவரை நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.15,000 பணம் மற்றும் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் நத்தம் மெயின்ரோடு சிறுமலைபிரிவில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான முற்றிலும் இலவச தையல் பயிற்சியானது வருகிற 5 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பயிற்சியில் சேர இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு : 90802 24511, 94426 28434 அழைக்கவும்.இதை ஷேர் பண்ணுங்க

திண்டுக்கல் காந்திகிராமம் மற்றும் அம்மையநாயக்கனூர் துணை மின்நிலையங்களில் நாளை (ஜனவரி 5, திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, காந்திகிராமம், பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், சிப்காட் தொழில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <

தாடிக்கொம்பு, அழகுசமுத்திரபட்டி பிரிவு அருகே திண்டுக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவத்தில் திருப்பூரை சேர்ந்த சேகர்(55) சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பாண்டித்துரை காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கூகுளில்<

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.03) இணையதளத்தில் பல போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள் (Customer Care Number) உள்ளது. எச்சரிக்கை.! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.03) இணையதளத்தில் பல போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள் (Customer Care Number) உள்ளது. எச்சரிக்கை.! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.