Dindigul

News February 17, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News February 17, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக, பொறுப்பாளர்கள் மற்றும் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News February 16, 2026

தலைக்கவசம் உயிர்க்கவசம்: காவல்துறை விழிப்புணர்வு!

image

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி மற்றும் சவேரியார் பாளையம் பகுதிகளில், திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் இன்று இருசக்கர வாகன ஓட்டிகளிடம் “தலைக்கவசம் உயிர்க்கவசம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கட்டாயம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கமளித்தனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து, விதியை பின்பற்றுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

News February 16, 2026

திண்டுக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திண்டுக்கல் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 16, 2026

திண்டுக்கல்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News February 16, 2026

திண்டுக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

News February 16, 2026

கொடை: பெற்றோரை அருவாளால் வெட்டிய மகன்

image

கொடைரோடு அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெற்றோரை மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்கையநாயக்கனூரை சேர்ந்த பாண்டி, மீனாட்சி தம்பதியினரை, அவர்களது மகன் சுருளி (45) அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் இருவரையும் அவர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருளியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 16, 2026

திண்டுக்கல்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,92.
4) விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும்.
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 16, 2026

திண்டுக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு<> க்ளிக் செய்து<<>> எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 16, 2026

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்டத்தின் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இன்று பிப்ரவரி.16, 2026 மாலை 5:45 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHARE IT

error: Content is protected !!