India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் வருடத்தில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்க பணிகள் மூலம் ஆரசுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 41 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.1.70 கோடியும், இணக்க கட்டணமாக ரூ.73 ஆயிரமும், வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ. 1.60 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் ஜன.7 முதல் ஜன 27 வரை விண்ணப்பிக்கலாம். வருகின்ற மார்ச். 22 அன்று இணைய வழியில் தேர்வு நடைபெறும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் இருபால்(ஆண்/பெண்) கல்லூரி மாணவர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களில் ஒருவக்கு 2025-ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருது ஜன.15ல் வழங்கப்பட உள்ளது. இவ்விருத்திற்கு ரூ.1,00,000 காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://award.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குழந்தை திருமணங்கள் நடத்தியது தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் உடல் நல மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில், 700க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்பனையாகின. அதன்படி, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு, ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
பாலக்கோடு அடுத்த பெருங்காடு ஊ.ஒ.ந பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி. இவர் 5ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேரை தினமும் கழிவறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாக, மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அது உண்மை என்பது தெரிந்தது. தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவின் உத்தரவின் பேரில் தலைமை ஆசிரியை கலைவாணி 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மண்டலத்தில் உள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 20ஆம் தேதி வரை 180 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு ஊர்களுக்கு செல்ல நேற்று முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்களும், இதேபோல் ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து 20ஆம் வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தருமபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க, தருமபுரி வழியாக வரும் ரெயில்களில் ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எப். போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில் பயணத்தின் போது, உடைமைகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் தருமபுரி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்து, துறை அலுவலர் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தர்மபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்ட அறிக்கையில், ”தமிழர் திருநாளான பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் இதுபோன்ற செயல்களை தடை செய்த உயர்நீதிமன்றம் பழைய மரம்வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்தது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.