Dharmapuri

News August 18, 2025

மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டி

image

தருமபுரி மாவட்ட தடகள சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டி வருகின்ற 24.08.2025 காலை 7.00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கனைகள் 19.09.2025 முதல் 21.09.2025 வரையில் செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

News August 18, 2025

பெண்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி

image

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த பயிற்சியின் போது மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
தகவல்களுக்கு 04348-230511, 866767947 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

பெண்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி

image

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த பயிற்சியின் போது மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
தகவல்களுக்கு 04348-230511, 866767947 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

தர்மபுரி: உள்ளூர்லயே வேலை கிடைக்க இத பண்ணுங்க

image

உள்ளுரிலே நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். உள்ளூரில் வேலை தேடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இந்த <>லிங்கில்<<>> சென்று, தருமபுரி மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான வேலைக்கு அப்ளை செய்யலாம். *காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News August 17, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்

image

தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு ரூ. 830.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

News August 17, 2025

BREAKING: தர்மபுரி மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

image

தர்மபுரி மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் முதல்வர் வெளியிட்டார்
* சித்தேரி ஊராட்சி 63 கிராமங்களையும் அரூர் வட்டத்தில் இணைக்கப்படும்
* ஒகேனக்கல் மாவட்ட நெடுஞ்சாலை 25 கிமீ நான்கு வழித்தடமாக மாற்றப்படும்
* நல்லம்பள்ளி மலைச்சாலை ரூ.10 கோடி தார்சாலையாக அமைக்கப்படும்
* நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் கட்டப்படும்
* புளி உற்பத்தி செய்ய ரூ.11 கோடியில் புளி வணிக மையம்

News August 17, 2025

தர்மபுரியில் புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்

image

தர்மபுரியில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்தேரி ஊராட்சி, கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளை பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் இருந்து அரூர் வட்டத்தில் இணைப்பதாக அறிவித்தார். மேலும், அரூர் பகுதியில் உள்ள வள்ளிமதுரை அணையிலிருந்து ₹15 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

News August 17, 2025

தருமபுரியில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால்<> இந்த இணையதளத்தில்<<>> புகார் அளிக்கலாம். மேலும், இந்த 3 பெட்ரோல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பெட்ரோல் மட்டுமல்லாமல் சிலிண்டர் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவித்து பயன் பெறுங்கள். பைக், கார் ஓட்டும் அனைவருக்கும் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்

News August 17, 2025

தருமபுரியில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 1/2

image

தருமபுரியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <>இணையதளத்தில் <<>>புகார் அளிக்கலாம். ஆதாரத்துடன் புகார் அளியுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17432142>>தொடர்ச்சி<<>>

News August 17, 2025

தர்மபுரியில் குடும்பத்துடன் இன்று இங்கே போங்க!

image

தர்மபுரியில் அமைந்துள்ள ஸ்ரீ பரவாசுதேவப் பெருமாள் கோயில், முக்கியமான விஷ்ணு கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவரான பரவாசுதேவர், ஆதிசேஷன் மேல் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள பெருமாளின் திருவடிகளை பிரம்மா பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. சுப காரியங்கள் தடைபடுவது, திருமணத் தடை போன்ற பிரச்சனைகளை நீக்கும் என்பது நம்பிக்கை. ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்

error: Content is protected !!