India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை & முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதுகலை பாடப் பிரிவுக்கு மாணவர் சேர்க்கைக்கு வருகின்ற செப். 17ஆம் தேதி கடைசி நாள் ஆகும் நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் தேவையான சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பாக செப்டம்பர் 5 இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரியூர் கிழக்கு ஒன்றியம் நாகமரை ஊராட்சியில் உள்ள 26 கிராம கிளைகழகங்களுக்கு அஇஅதிமுக உறுப்பினர் அட்டைகள் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, மாநில விவசாய பிரிவு தலைவர் டிஆர். அன்பழகன் தலைமையில் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ஏ.தங்கராசு,நகர செயலாளர் சுப்பிரமணி, வேட்பாளர் அசோகன், பொன்னுவேல் மற்றும் கிளை செயலாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில்
வருவாய் துறை சார்பில் 1400 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விழா தர்மபுரி பொறுப்பு அமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (செப்.5) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திமுக மேற்கு மா.செ.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் 2023-24ஆம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சமுதாய கூடம் கட்டிடம் புனரமைத்தல் பணியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி இயக்குநர் கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பாக முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவது தொடர்பான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு குழு கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் இன்று (04/09/2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பாரிஸ் நகரில் பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற வருகிறது. உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற நம் இரும்பு நகரத்தின் ‘தங்க மகன்’ @189thangavelu மாரியப்பன் தங்கவேலுக்கு
தருமபுரி மேற்கு திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தனது x தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம்
குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி இயக்குநர் கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்
இன்று தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சோ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 67 மனுக்கள் பெறப்பட்டு 67 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.
தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுவது வழக்கம். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 4 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நாளை இந்த விருதுகளை பெற உள்ளனர். தலைமை ஆசிரியர் தங்கராஜ், இடைநிலை ஆசிரியர் மணிவேல், பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் சிவாஜி ஆகியோர் விருதுகள் பெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுவது வழக்கம். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 4 மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் நாளை விருதுகளை பெற உள்ளனர். இதில் தலைமை ஆசிரியர் ஆனந்தன், கணினி பயிற்றுநர் புகழேந்தி, பட்டதாரி ஆசிரியர் ராஜ்குமார், முதுகலை ஆசிரியர் தமிழ் தென்றல் ஆகியோர் விருதுகள் பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.