India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியராக நேற்று மாலை தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்து வந்த திரு. சதீஷ் ஐஏஎஸ் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (01.02.2025) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய 2025-2026 -ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி, கருணாநிதி கனிமொழி, அருண்நேரு, செல்வகணபதி, கலாநிதி வீராசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தர்மபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இன்று ( ஜன.31 ) ரோந்து பணியில் ஈடுபடுவோரின் காவல்துறையினர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் (Young Professional) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.01.2025 முதல் 17.02.2025 தேதிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை https://dharmapuri.nic.in என்ற இணையதளம் மூலம் அனுப்பவும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 30.12.2024 வரை நெல், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 48,797 விவசாயிகளுக்கு ரூ.489.22 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருப்பு இல்லை. கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5.892 குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டியினை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மலர்விழி உள்ளிட்ட அரசுத்துறை அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு இன்று (ஜன.31) பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த கி. சாந்தி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சதீஸ் என்பவரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். <
தருமபுரி மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு ராபி பருவத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிர்களுக்கு இன்று (ஜன. 31) விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.517 தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.