India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து 45 நாட்கள் சூரிய மின் பலகை பொருத்தும் பயிற்சியை வழங்குகின்றன. இதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு NSDC சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05), இரவு முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க!

தருமபுரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார்களை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
தருமபுரி:04342-270013
நல்லம்பள்ளி:04342-244234
பென்னாகரம்:04342-255631
பாலக்கோடு:04348-222032
காரிமங்கலம்:04348-241247
அரூர்:04346-222032
பாப்பிரெட்டிப்பட்டி:04346-246432
ஏரியூர்:04342-252332

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று(மார்ச் 4) நடந்தது. இதில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், தருமபுரி அதிமுக மு.அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு சிறபித்தார்.

காரிமங்கலம் அருகே மூக்கனூரைச் சேர்ந்தவர் வரதன். இவருடைய மகன் சண்முகம்(48). பொக்லைன் ஆப்பரேட்டரான இவர், சம்பவத்தன்று மொரப்பூரில் இருந்து மூக்கனூருக்கு பைக்கில் சென்றார். ஜடையம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது நிலை தடுமாறி விழுந்த அவர், படுகாயமடைந்தார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் PMKVY 4.0 திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு முடித்த 18 முதல் 45 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.