Dharmapuri

News March 2, 2026

தருமபுரியில் முதல்வர், து.முதல்வர் போட்டியிட மனு

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று(மார்ச் 1) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி தொகுதியில் போட்டியிட வேண்டி விருப்பமானவை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வழக்கறிஞர் மணி தாக்கல் செய்தார்.

News March 2, 2026

தருமபுரியில் அதிரடி கைது!

image

பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). இவர், நேற்று முன் தினம் மது அருந்திவிட்டு பாலக்கோடி பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்யும் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகன்யா(34) என்பவர் பாலக்கோடு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.

News March 2, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

மொரப்பூர் அருகே பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன்(67). இவரது மனைவி ஜீவா(55). இவர்கள் இருவரும் நேற்று(மார்ச் 1) பைக்கில் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கண்ணையன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். ஜீவாவிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News March 2, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01), இரவு முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News March 2, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01), இரவு முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News March 1, 2026

தருமபுரி : அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

தருமபுரி மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

image

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

தருமபுரி : கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

தருமபுரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com

இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in

ஹெச்.பி: https://myhpgas.in

கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News March 1, 2026

தருமபுரி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

தருமபுரி: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

image

தருமபுரி: புலிக்கரை அருகே உள்ள மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நேற்று(பிப்.28) நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி அதிமுக மாவட்ட கழக செயலாளர் கே. பி. அன்பழகன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

error: Content is protected !!