India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி பகுதியை சேர்ந்த பூ வியாபாரி பெரியசாமி(31). இவர் 12 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அறிந்த பெற்றோர் தர்மபுரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சிவஞானம் குற்றவாளி பெரியசாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை & 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 வது நாள் சிறையில் இருந்து நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் கட்சியினர் பலரும் உடன் இருந்தனர்.
தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் நிறைவு பெற்றது. இந்நிலையில், போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 718 வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார், வனக்காப்பாளர் ரவிக்குமார், காளிமுத்து, வனக்குழுவினர் மற்றும் ஒகேனக்கல் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் குழுவினர் நேற்று ஒகேனக்கல் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த அரண்மனை பள்ளம் பகுதியை சேர்ந்த வடிவேல், காளிமுத்து ஆகிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிகளுக்கு குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரி உள்ளது. மேலும், 1 ஆண்டில் குறைந்தபட்சம் 50 குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இது தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே குழந்தை திருமணங்களை தடுக்க கிராமப்புற அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் திமுக பவள விழா அக்டோபர் 03 தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. அது சமயம் தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில,மாவட்ட, ஒன்றிய,பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திமுக மா.செ.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுகூட்டம் மாவட்ட ஆட்சியர், கி.சாந்தி இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீதர், இளைஞர் நீதிபதிக்கும் முதன்மை நடுவர், எழிலரசி, இளைஞர் நீதிக்கும் உறுப்பினர் திரு.சரவணன், குழந்தை நலக்குழுஉறுப்பினர், பிரமிளா, மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவசர தேவைகள், உதவிகள், பேரிடர் காலத்தில் வீடு சேதம் , கால்நடை உயிரிழப்பு, போக்குவரத்து பாதிப்பு மற்றும் தேக்கங்கள் பற்றி தகவல்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு மையம் இலவச எண் 1077 என தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் 3 நாள் நடைபெறும் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கல்லூரி சந்தையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பார்வையிட்டார். உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லலிதா அனைத்து உதவி திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்
Sorry, no posts matched your criteria.