Dharmapuri

News August 28, 2025

தருமபுரியில் விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்பு.

image

தருமபுரி மாவட்டத்தில், விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13,058 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 12,319 விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார். இந்த இணைப்புகள் 01.04.2021 முதல் 31.03.2025 வரையிலான காலத்தில் வழங்கப்பட்டுள்ளன

News August 28, 2025

தருமபுரியில் பேச்சுப் போட்டிகள்: மாணவர்களுக்கு அழைப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டுப் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. செப்.1 அண்ணாவுக்கும், செப்.2 பெரியாருக்கும் போட்டிகள் நடைபெறும். தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வுகள் நடக்கும். இதில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆக.28) நடைபெற்றது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தனர்.

News August 28, 2025

தர்மபுரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தர்மபுரி மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 28, 2025

தர்மபுரியில் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 104 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்து நாளை மாலை 5.45க்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு SHARE பண்ணுங்க

News August 28, 2025

தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ மறைவு

image

தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R .சின்னசாமி இன்று காலை 10.30 மணி அளவில் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்நிலையில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 1971,1984 மற்றும் 1989 ஆண்டு தேர்தல்களில் தருமபுரி எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார்.

News August 28, 2025

தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540114>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தை பாதுகாப்பு பயன்பெற குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க

News August 28, 2025

தர்மபுரி: கணவாயில் இத்தனை விபத்துக்கள் ?

image

தருமபுரி மாவட்டத்தில் பெங்களூரு நெடுசாலையில் உள்ள தொப்பூர் கணவாய் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக அறியப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 961 விபத்துக்கள் ஏற்பட்டு, 225 பேர் பலியானதாக தரவுகள் கூறுகின்றன. பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள் வரும் போது சாலையின் உயரம் குறைவாக இருப்பதால், வேகத்தில் பிரேக் பெயிலியர் ஆவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனாலேயே இதை கொலைகார கணவாய் என்கின்றனர்.

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்து விபத்து

image

நேற்று காவிேரிப்பட்டினத்தில் இருந்து தர்மபுரி சென்ற அரசு பேருந்தில் கார் பின்புறத்தில் மோதியது. காரில் இருந்து பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!