Dharmapuri

News March 5, 2025

தர்மபுரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி விவசாயிகள் தங்கள் நில உடமை பதிவுகளை சரிபார்க்க ஒரு பொன்னான வாய்ப்பு தங்கள் கிராமம் தேடி வருகிறது. இந்த முகாமில் பங்கேற்று தாங்கள் நிலப் பதிவுகளை சரி பார்த்துக் கொள்ளுமாறு வேளாண் அலுவலர் தேவி தெரிவித்துள்ளார்.

News March 5, 2025

அரூரில் இரண்டு ஆதார் திருத்த மையம் செயல்படும்

image

அரூர் நகரத்தில் வட்டாச்சியர் (தாசில்தார்) அலுவலகத்தில் ஆதார் திருத்த மையம் செயல்பட்டு வருகிறது அங்கு ஒரு மையம் இருப்பதினால் மக்கள் ஆதார் பெயர், முகவரி, செல் நெம்பர் திருத்தம் செய்ய அதிக கூட்டம் இருப்பதால் இதற்கு அரூர் MLA திரு. வே. சம்பத்குமார் அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார் இதன் பேரில் அரூரில் இரண்டு ஆதார் மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தர்

News March 5, 2025

தருமபுரி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி 

image

தருமபுரி பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கியது. இதில் ஓசூர் அலசநத்தம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இருவருக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News March 4, 2025

ஆசிரியர் ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக மாணவி புகார்

image

அழகாபுரியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, இலக்கியம்பட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் மாணவியின் தாயார் உயிரிழந்ததால், அவர் ஒரு மாதம் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. பின்னர் மீண்டும் பள்ளிக்கு சென்றபோது, ஆசிரியர், மாணவியை ஜாதி பெயரை செல்லி திட்டியதாக, இன்று மாணவி, முதன்மை கல்வி அலுவலரிடம், மாவட்ட பாஜக தலைவர் மூலம் புகார் அளித்தார்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <>ஆன்லைன் வழியாக<<>> விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

தருமபுரியில் எலுமிச்சை பழம் விலை உயர்வு

image

தருமபுரியில் எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று வரத்து சரிவு காரணமாக ஒரு கிலோ ரு.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களில் திருவிழாக்கள் தொடங்கியுள்ளதால் மக்கள், கோவில் நிர்வாகிகள் அதிகளவில் எலுமிச்சை பழம் வாங்கி செல்வதால் விலை மேலும், உயரலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

News March 4, 2025

மார்ச் மாதம் முழுவதும் மின்தடை இல்லை

image

துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது. தற்போது, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலன் கருதி மின்வாரியம் மார்ச் மாதம் முழுவதும் மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது.

News March 3, 2025

ஆசிரியர்கள் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை 

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகாமையில் சாந்தி என்பவர் பள்ளி வளாகத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவரை கன்னத்தில் அடித்து சாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்களான தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் ஆகிய இருவரையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தனர்.

News March 3, 2025

 தர்மபுரி மாவட்டத்தில் 19,336 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

image

தமிழகத்தில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் இன்று மார்ச் 03, 83 தேர்வு மையங்களில் 19,336 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை உள்ளிட்ட 3 ஆயிரத்து 500 பேர் பணியாற்றுகின்றனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!