India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை அன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி. வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <

தர்மபுரி: நல்லம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்ற பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2019-ல் காதல் திருமணம் செய்த நிலையில், அவரது கணவர் பரத், வரதட்சணை கேட்டு ஸ்ரீபிரியாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரை கொலை செய்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஸ்ரீபிரியா வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக, பரத் அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

தர்மபுரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <

தர்மபுரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். அவசியம் SHARE பண்ணுங்க

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில், பரிசல் சவாரிக்குச் செப். 7-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பரிசல் ஓட்டிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறந்த பரிசல் ஓட்டிகளின் வாரிசுகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனால், பரிசல் சவாரி செய்ய முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தர்மபுரி மக்களே; கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <

தருமபுரி உழவர் சந்தையில் இன்று (செப்டம்பர்-8) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.15, கத்தரிக்காய் ரூ.22, வெண்டைக்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ.15, முருங்கைக்காய் ரூ.55, பச்சைமிளகாய் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.28, இஞ்சி ரூ.88, உருளைக்கிழங்கு ரூ.30, கேரட் ரூ.58, பீட்ரூட் ரூ.28, பீன்ஸ் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது.

▶️ வருவாய் கோட்டங்கள்: 2 (தர்மபுரி, அரூர்)
▶️ தாலுகா: 7
▶️ வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்): 10
▶️ வருவாய் கிராமங்கள்: 470
▶️ நகராட்சிகள்: 2 (தர்மபுரி, அரூர்)
▶️ பேரூராட்சிகள்: 10 (கம்பைநல்லூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாளையம், பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பி. மல்லாபுரம், கூத்தப்பாடி)
▶️ கிராம ஊராட்சிகள்: 251

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எண்டப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட முருகன் (49), செல்வம் (60), மாது (56) ஆகிய மூவரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகளும், ₹150 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.