Dharmapuri

News March 9, 2025

நல்லம்பள்ளியில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

image

நல்லம்பள்ளி அடுத்த, புறவடை பகுதியை சேர்ந்த ஷேர்லின்பெல்மா, (வயது 44) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்தபின் மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

News March 9, 2025

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1088 வழக்குகளுக்கு சமரச தீர்வு

image

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மார்ச் 08 நடைபெற்ற மக்கள் தேசிய நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 2359 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 1088 வழக்குகளுக்கு சமரசத் தீர்வுகள் காணப்பட்டது மேலும் மேலும் இந்த வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகையாக 14 கோடியே 54 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 9, 2025

தருமபுரி எஸ்.பி நேரில் வாழ்த்து

image

தர்மபுரி மாவட்டத்தில் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன் பெண் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பணியாளர்கள் காவலர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

News March 8, 2025

தருமபுரியில் விரைவில் தோழி விடுதிகள்

image

தருமபுரியில் விரைவில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய அவர், “ தருமபுரி,சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 700 படுக்கை வசதிகளுடன் ரூ.72 கோடியில் தோழி மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். 24 மணி நேரமும் காவலாளியுடன், பயோமெட்ரிக் வசதியுடன் அமைய உள்ளது” என்றார். ஷேர் பண்ணுங்க

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றர்.

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது

image

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவிக்கு (13), அங்கு பணிபுரியும் மொரப்பூர் கலைஞர் நகரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முல்லைமொழி (23) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் போலீசார் முல்லைமொழியை இன்று (மார்.7) போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 8, 2025

தனியார் உள்ளூர் சேனலில் ஆபாச படம்

image

தர்மபுரி மாவட்டத்தில் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் நேற்று (மார்.7) ஆபாசப்படம் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன் கூறுகையில் , ”அந்த சேனல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது. உடனே ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சேனல் உரிமையாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

News March 7, 2025

தர்மபுரி காட்டில் யானை வேட்டை: இருவர் சஸ்பெண்ட்

image

பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் வனப்பகுதியில், கடந்த வாரம் யானை வேட்டையாடப்பட்டு தும்பிக்கை தனியாகவும், உடல் எரிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. இதை தடுக்க தவறிய நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனூர் பீட் வனக் காப்பாளர் தாமோதரன் இருவரையும், தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

error: Content is protected !!