India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தர்மபுரி மாவட்டத்தில் 2024 -2025 ஆம் ஆண்டிற்கு ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், பிப்ரவரி 6,7 ஆகிய 2 நாட்கள் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டு பல்வேறு குற்றங்களைத் தடுப்பதற்காகவும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு ரோந்து பணிக்குச் செல்வதற்காக காவல்துறையினரை அமைத்து கண்காணித்து வருவதற்கு இன்று ( ஜனவரி 28 ) காவல்துறையினர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ராகி சாகுபடி செய்த சிறு குறு விவசாயிகள் நேரடியாக ராகி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். மேலும் ராகி கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், மண்டல மேலாளர்: 94439380003, அலுவலக: 04342-231345, விழிப்பு அலுவலர்: 044-26424560 ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் வீட்டுப் பணியில் ஈடுபடும் பணியாளர்களை தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் உரிய ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “நீர்நிலைப் பாதுகாவலர் விருது” இந்த ஆண்டிற்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.01.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜன.31ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்து கூறி பயனடையலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 2 பேர் கையில் வைத்திருந்த கேனில் இருந்த டீசலை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரித்த போது பழைய ஓட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த தசரதன் இவரது மனைவி பாஞ்சாலை என்பது தெரியவந்தது.

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜன.31) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின், வழிகாட்டுதல்படி, அதியமான் ஜல்லிக்கட்டு பி ஆர் பேரவை, நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா வருகின்ற பிப்.14 வெள்ளிக்கிழமை அன்று, தமிழக அரசு விதிமுறைகளுடனும், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படியும் நடைபெறும் என அதியமான் ஜல்லிக்கட்டு பி ஆர் பேரவை அறிவித்துள்ளது. இந்த தகவலை உங்க ஊர் மக்களுக்கு SHARE பண்ணுங்க.

சேலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை நேற்று முன்தினம் கோவில் வெள்ளாறு பகுதியை சேர்ந்த சங்கர் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, தொப்பையாறு டேம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தன் பேரில் பெற்றோர் தொப்பூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.