India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.21) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.22, கத்தரிக்காய்: ரூ.8-10, வெண்டைக்காய்: ரூ.15, முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.30, கொத்தவரை: ரூ.60, பச்சைமிளகாய்: ரூ.40, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

தருமபுரி மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த<

தருமபுரி பாஜக நிர்வாகிகள் சார்பில் நேற்று (ஜன.20) மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷிடம் கோரிக்கை வழங்கப்பட்டது. இதில் மனுவில் தருமபுரி இரயில்வே நிலையம் எதிரில் உள்ள நெல்லி நகர் பகுதியை சார்ந்த பொது மக்களின் வழித்தட பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட கட்சியி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று (ஜன.20) வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதையடுத்து தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் குறித்த கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 190 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மக்களே! இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் <

தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர், கடத்தூர், பூமிசமுத்திரம், கே.ஈச்சம்பாடி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், முத்தம்பட்டி, , மல்லமாபுரம், பள்ளம்பட்டி, கெலவள்ளி, இருமத்தூர், வாடமங்கலம், கடத்தூர், திப்பம்பட்டி, கொன்றம்பட்டி, மரியம்பட்டி, கொங்கரப்பட்டி, காட்டனூர் , மாவடிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று(ஜன.21) காலை 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அடுத்த ரத்தினகிரி கிராமத்தை சேர்ந்தவர் சுகன் (21). பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று (ஜன.21) பெங்களூருக்கு புறப்பட்டார். அப்போது தருமபுரி, கொலசனஅள்ளி அருகே சென்றபோது பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானாது. இதில் சுகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கமாரண்டஅள்ளியை சேர்ந்த விவசாயி மாதேசன் (29). இவர் கொலசனஅள்ளி தனியார் கண் மருத்துவமனை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மாதேசன், பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த மாரண்ட அள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.20) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் உலகநாதன், தொப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.20) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் உலகநாதன், தொப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!
Sorry, no posts matched your criteria.