India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் முத்து ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2025 அக்.23 அன்று பெய்த மழையினால் அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், நாளை (ஜன. 24 – சனிக்கிழமை) அனைத்துப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவின்படி, விடுமுறையைச் சரிகட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் நாளை பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

1.முதலில் <

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<

தருமபுரி மாவட்ட மக்களே! இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் மணி இன்று (ஜன.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (ஜன.24) காலை 11 மணியளவில் திமுக மாவட்ட அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பென்னாகரம் அருகே பெத்தம்பட்டியை சோ்ந்த கூலி தொழிலாளி ராஜா (53). இவா் கடந்த 15-ம் தேதி இரவு பெத்தம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நல்லப்பரம்பட்டியைச் சோ்ந்த சாக்கப்பன் (45) மீது பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனா்.

தருமபுரி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <

பென்னாகரம் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.23) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ-23-25 சுரைக்காய்: ரூ.18-20, சின்ன வெங்காயம்:ரூ.48-50 வெண்டைக்காய்: ரூ.33-35, புடலங்காய்: ரூ.28-30, பீர்க்கங்காய்: ரூ.33-35, மிளகாய்: ரூ.43-45, பெரியவெங்காயம்: ரூ.33-35, தேங்காய்: ரூ.78-80, பீன்ஸ்: ரூ.58-60, மற்றும் கேரட்: ரூ.58-60 என விற்பனை செய்யப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.