Dharmapuri

News June 28, 2024

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒப்புதல்

image

தர்மபுரி நகராட்சி சாதாரண கூட்டம் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தருமபுரி நகரில் ரூ. 40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

News June 28, 2024

பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அழைப்பு

image

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் காரிப் பருவ பயிர்களுக்கு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் பயிரை பொறுத்து அவர்கள் கடன் தரும் வங்கிகள் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக பயிர்களை காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

தருமபுரி: எஸ்பி அலுவலத்தில் 87 மனுக்களுக்கும் தீர்வு

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டன, அதில் 87 மனுக்களுக்கும் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த குறைதீர்க்கும் முகாம் தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.

News June 25, 2024

தருமபுரி எம்.பி.மணி பதவியேற்பு

image

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மணி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மணி, தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 25, 2024

கலெக்டர் மாதாந்திர ஆய்வு கூட்டம்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் ஒழித்தல் போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News June 25, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் இரத்த கொடையாளர்களை பாராட்டி, சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த. கி. சாந்தி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பிலிப்பின்ஸ் ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர்.

News June 24, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் இரத்த கொடையாளர்களை பாராட்டி, சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த. கி. சாந்தி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பிலிப்பின்ஸ் ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர்.

News June 24, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 622 மனுக்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு இன்று வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 622 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News June 24, 2024

தர்மபுரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

தர்மபுரி மாவட்டம் பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் வருகின்ற (ஜூன் 29)சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்;https://forms.gle/JJZiLSgprrtCftpb8 என்ற கூகுள் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு தொடர்பு எண்கள்;88255 25544,7010977900

News June 24, 2024

இன்று 2ஆம் கட்ட கலந்தாய்வு

image

அரூர் அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட பொது கலந்தாய்வு இன்று(ஜூன் 24) நடைபெறுகிறது. சேர்க்கையின் போது மாணவர்கள் மதிப்பெண் பட்டியல்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவர வேண்டும். மேலும், இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!