Dharmapuri

News July 21, 2024

நாம் தமிழர் போராட்டம் அறிவிப்பு

image

தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தர்மபுரியில் இன்று நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெறுகிறது.

News July 20, 2024

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை

image

ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீரில் கலங்கல் தன்மை மிக அதிகமாக உள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழுமையாக வரையறுக்கப்பட்ட குடிநீர் அளவான 145 MLD பம்ப் செய்ய இயலவில்லை. இதனால் தருமபுரி மாவட்டத்திற்கு ஒருநாளும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒருநாளும் தண்ணீர் வழங்கப்படும். எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

News July 20, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ஒகேனக்கல்லில் சுற்றலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News July 20, 2024

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதில், மழைக்காலங்களில் வாகனத்தை மெதுவாக இயக்குவதுடன் வாகனத்தின் முகப்பு விளக்கை ஒளிரும்படி வாகனத்தை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களுக்கு இடையே போதுமான இடைவெளியை கடைப்பிடிக்கவும் மழைநீர் தேங்கியுள்ள இடங்களின் கவனமாக வாகனத்தை இயக்கவும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

News July 20, 2024

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை அறிவிப்பு

image

தர்மபுரி, அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டு, ஆகஸ்ட் 2024-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் கட்ட சேர்க்கை நடைபெறுகிறது. இதில், தொழிற் பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் நேரடி சேர்க்கை 15/07/2024 முதல் 31/07/2024 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை தவறவிடாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு தர்மபுரி – 9445803042, அரூர் – 9600359646 அழைக்கலாம்.

News July 20, 2024

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணசேகரன் இன்று (ஜூலை20) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகள்  நெல், சோளம், நிலக்கடலை பயிர்களுக் காப்பீடு கட்டணத்தை செலுத்த வருகின்ற 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும், விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் & பொது சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார் .

News July 19, 2024

தருமபுரியில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஜூலை 19) காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 45000 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஐந்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் காவேரி கரையோர விவசாய பெருமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News July 19, 2024

ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு  ஆட்சியர் ஆலோசனை கூட்டம்

image

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராகிம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

News July 19, 2024

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

image

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று ஆய்வு செய்தார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை பேரூராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு பனாரஸ் தெருவில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

error: Content is protected !!