India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (டிச.20) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், ஐடிஐ கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் விற்பனையாளர், மார்க்கெட்டிங் உட்பட பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரியை அடுத்த கடகத்தூரில் நாளை காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பள்ளி படிப்பு, டிப்ளமோ, டிகிரி உள்ளிட்ட அனைத்து கல்வித் தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டி போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யவுள்ளனர். சேர் செய்யவும்.
மதுவிலக்கு வேட்டையின் போது பிடிப்பட்ட வாகனங்கள் நேற்று (டிசம்பர் 18) தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் 74 இருசக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 79 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது அவை 12,25,146 ரூபாய்க்கு ஏலம் போனது. அவை அரசு கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
டிசம்பர் 23 அன்று தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. டிச-24 அன்று” உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டிய முகவரி dpicpac@gmail.com. தர்மபுரி மாவட்ட மைய நூலகரின் கைப்பேசி எண்:9486688323
அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி தலைவர் இளையராஜா,ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.”ஏழாண்டாக அரூர் தொகுதி தலைவராக நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி உள்ளேன். தற்போது கனத்த இதயத்துடன் நான் கட்சியிலிருந்து விலக முடிவை எடுத்துள்ளேன்.தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கூண்டே கிடையாது. நாங்கள் மட்டும் தான் உள்ளோம். தற்போது நாங்களும் விளக்குகிறோம் என்றார்.
தர்மபுரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டின் அளவை குறைக்க முடியும். பகலில் அதிகளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் இயன்ற அளவு தங்களது விவசாய மின்மோட்டார்களை பகல் நேரத்தில் இயக்கி உபயோகப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
மாட்லாம்பட்டியில் உள்ள அரசு சட்டகல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா 2024 கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், முதலிடம் பிடித்த ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரிக்கு, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தருமபுரி மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி வரும் 21.12.2024 அன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பிற்பகல் 1 மணி அளவில் வருகை புரிந்திருக்க வேண்டும். தருமபுரி மாவட்ட போட்டியாளர்கள் முன்பதிவிற்கு 7373002611 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவு கூரும் வகையில்18.12.2024 முதல் 27.12.2024 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நடைபெற உள்ளது ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பாக கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆட்சிமொழி மின்காட்சி உரை, ஆட்சி குறிப்புகள் வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, மற்றும் பல்வேறு நிகழ்ச்சியை ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 91 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 95 வாகனங்கள் டிச 18ஆம் தேதி காலை 8 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து விருப்பமுள்ளவர்கள் பத்தாயிரம் முன் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம் என தர்மபுரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
Sorry, no posts matched your criteria.