India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01/01/2011 முன்னர் கட்டப்பட்ட அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு வரைமுறை படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01/08/2024 முதல் 31/01/2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.tcp.org.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் கல்விக் கடன் முகாம் நாளை(ஆக 22) நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர் இந்தியன் வங்கி மாவட்ட தொழில் மையம் சிப்காட் தொழிற்பேட்டை ஒட்டப்பட்டி தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533941,8925533942,04342-230892 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். சேர் செய்யவும்.
முப்படைகளில் பணிபுரிந்து அவில்தார் மற்றும் அதற்கு இணையான தகுதி பெற்ற முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களின் சிறார்களுக்கு கேந்திரி சைனிக் போர்டு மூலம் ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 2024 -2025ஆம் ஆண்டிற்கான மு. படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஆக 23 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் கூறி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (23.08.2024) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் கூறி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டிற்கான முன்பதிவு https://sdat.tn.gov.in என்ற இணையதள வாயிலாக 25/08/2024 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் ‘ஆடுகளம்’ தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலை அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ பையில் சுருட்டி வீசி சென்றுள்ளனர். தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் குழந்தையை தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாவட்ட ஆட்சியர் சாந்தி குழந்தையை நேரில் பார்த்து, உரிய சிகிச்சையளிக்க வலியுறுத்தினார். தொடர்ந்து குழந்தை, தர்மபுரி தொட்டில் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர வேண்டாம் எனவும், அவ்வாறு பரப்பினால் அது சட்டப்படி குற்றமாகும் எனவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தருமபுரி மாவட்ட காவல்துறையினர் X தளம் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. தருமபுரி தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 92 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏரளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
பசு மாடுகளுக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல்கழலை நோயினை கட்டுப்படுத்தும் விதமாக தர்மபுரி மாவட்டத்தில் வருடாந்திர பூஸ்ட் தடுப்பு ஊசி செலுத்தும் பணிகள் 2024 ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 2 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. எனவே கால்நடை விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் அணுகி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.