India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாப்பிரெட்டிப்பட்டி மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த 48 வயது விவசாயி குப்புசாமி, டிவிஎஸ் எக்செல் வாகனத்தில் சென்றபோது, கார் மோதி படுகாயமடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக A. சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி கண்ணன் , அரூர் வசந்தா , பென்னாகரம் குமரவேல் பாண்டியன், மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருட்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க புதிய வழிகளை அறிவித்துள்ளார். 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 94981 10581 மற்றும் 63690 28922 ஆகிய வாட்ஸ்அப் எண்கள், மற்றும் ‘DRUG FREE TN’ என்ற மொபைல் செயலி மூலம் எந்த புகார்களை அளிக்கலாம். புகார் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், கஞ்சா தொடர்பாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 93.432 கிலோ கஞ்சா, ஒரு கார், 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 23.380 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.

தருமபுரி, அதியமான்கோட்டையில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். இந்தியாவில் காசிக்கு அடுத்து, தென் இந்தியாவில் காலபைரவருக்கென்று அமைந்துள்ள ஒரே தனிக்கோயில் இதுதான். அதியமான் மன்னன் போருக்குச் செல்லும் முன் தன் வாளை வைத்து இங்கு வழிபட்டதால், இன்றும் பைரவரின் திருக்கரங்களில் திரிசூலத்துடன் சேர்ந்து வாளும் இருப்பதைக் காணலாம். எதிரிகளின் தொல்லைகள் நீங்க, தடைகள் விலக இங்கே வழிபடலாம். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 22,087 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 11,576 மாணவர்களும் என மொத்தம் 33,663 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ் தெரிவித்துள்ளார். 2025-2026-ஆம் கல்வியாண்டில் மட்டும் 76 கல்லூரிகளில் 11,554 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இன்று (10.08.2025) நிலவரப்படி, பிராய்லர் கோழி கிலோ ரூ.200, நாட்டுக்கோழி கிலோ ரூ.400, ஆட்டுக்கறி கிலோ ரூ.700 என விற்கப்படுகிறது. மீன் வகைகளில், ரோகு மீன் கிலோ ரூ.200, கட்லா மீன் கிலோ ரூ.220, பாறை மீன் கிலோ ரூ.240, விவசாய மீன் கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது.

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ஜே. ராஜசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன் , அரூர் செந்தில் ராஜ்மோகன், பென்னாகரம் குமரவேல், மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.