Dharmapuri

News August 14, 2025

தருமபுரி: B.Sc, B.C.A, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>> வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

தருமபுரியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) பெண்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் தலைமையில், மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற பெண்கள் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 6374968624 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2025

மகளிருக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு மற்றும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.

News August 14, 2025

தர்மபுரி மாவட்டத்தில் எங்கெல்லாம் நாளை மின்தடை?

image

தருமபுரி மாவட்டம், கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி, இராமியணஹள்ளி மற்றும் இருமத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (15.08.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, கடத்தூர், பசவபுரம், பொம்பட்டி, பூதநத்தம், சிந்தல்பாடி, மணியம்பாடி, நவலை, ஆண்டிப்பட்டி, நத்தமேடு, புளியம்பட்டி, கம்பைநல்லூர், ரேகடஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

தருமபுரியில் சுதந்திர தின சிறப்பு சலுகை

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த தருமபுரி மண்டல பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையின்படி வாடிக்கையாளர்கள் ரூ.1க்கு அதிவேக 4G சிம் பெறலாம். இத்துடன், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 இலவச குறுந்தகவல்கள், வரம்பற்ற அழைப்புகள் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஷேர்

News August 14, 2025

பயிர்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்

image

தர்மபுரி மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், காரி பருவ பயிர்களான நெல், சோளம், நிலக்கடலை ஆகியவற்றுக்கு காப்பீடு செய்ய இன்றே (ஆகஸ்ட் 14) கடைசி நாள். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

தர்மபுரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் இயங்க தடை

image

தருமபுரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் அனைத்தும் 14.8.2025 இரவு 10.00 மணி முதல் 16.8.2025 காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க தர்மபுரி மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்

News August 14, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று(ஆக.13) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 13, 2025

வேலைவாய்ப்பு கண்காட்சியினை பார்வையிட்ட ஆட்சியர்

image

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர்ரெ.சதீஸ்,இன்று (13.08.2028) பார்வையிட்டார்கள். உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்.மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

புனித பயணம் செல்ல மானியம் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் செல்ல நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!