Cuddalore

News August 26, 2024

கடலூரில் தேசிய கண்தான விழிப்புணர்வு

image

கடலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனம், கடலூர் சார்பில் 39-வது தேசிய இருவார கண்தான விழிப்புணர்வு முகாம் இன்று முதல் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இது தொடர்பான விளம்பர பேனர்கள் மருத்துவமனை வாயிலில் இன்று இரவு வைக்கப்பட்டது.

News August 25, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (25/08/2024) கடலூர் காவல் ஆய்வாளர் சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2024

200 கிலோ வெடிமருந்து பதுக்கிய பெண் கைது

image

கடலூர் டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் நொச்சி காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பட்டாசுகள் தயாரிக்க உரிய அனுமதியின்றி 200 கிலோ வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (38), அவரது தாய் ஞான சௌந்தரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து ஞான சௌந்தரியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேசை தேடி வருகின்றனர்.

News August 25, 2024

மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு

image

கடலூர் பண்ருட்டி அருகே விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

News August 25, 2024

முதலமைச்சர் கோப்பை போட்டி: கடலூர் கலெக்டர் அறிவிப்பு

image

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க http://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 2-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 25, 2024

விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய e-DPC இணையத்தில் 1.9.2024 முதல் விளை நிலத்தின் பட்டா நகல், சிட்டா அடங்கல், ஆதார் வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விவசாயிகள் தொடர்புடைய கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து கொள்ளலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 25, 2024

மகளிடம் அத்துமீறல்; தந்தை மீது வழக்கு

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது தொழிலாளி. இவர் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயதுடைய தனது மகளை இன்று மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காட்டுமன்னார்கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2024

கடலூர்: ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (24/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் உத்ரம்மாள், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2024

கடலூரில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

விசிக கடலூர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மண்டல செயலாளர் ராஜ்குமார், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட செயலாளர்கள் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 24, 2024

மரக்கன்று நடும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

image

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பெருமளவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (24.08.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!