India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி செல்வமணி (58). இவருக்கும் இவரது தம்பி சுப்பிரமணியனுக்கும்(55) இன்று இரவு திடிரென குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், செல்வமணியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (03/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வள்ளி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே திராவிடர் கழகம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வேலு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் வரும் செப்.21 முதல் 6.10.2024 வரை மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்களை விற்பனைக்கு வைக்க விரும்பினால் 10.9.2024-க்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி புவனகிரியில் 47 மில்லி மீட்டர் மழையும், சேத்தியாதோப்பில் 40 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 13.1 மி.மீ, சிதம்பரத்தில் 10.6 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 9.6 மி.மீ, லால்பேட்டையில் 6 மி.மீட்டரும், விருத்தாசலத்தில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
பண்ருட்டி தாலுகா, காடாம்புலியூர் போலீசார் நேற்று கீழ்மாம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு முந்திரி தோப்புக்குள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(55), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்(33), ராஜா(50), அன்பழகன்(32), விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலை பாளையம் அன்பு(32), புதுப்பாளையம் சீனு(33) ஆகியோரை கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த கீழகுப்பம் துணை மின் நிலையத்தில் நாளை (4-ம் தேதி) பராமரிப்பு பணி நடக்க உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பேர்பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், மேலிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை செய்யப்பட உள்ளது.
கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் 6.9.2024 அன்று திருச்சியில் நடக்கிறது. இதில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விருதாச்சலம் இருளக்குறிச்சியை சேர்ந்த செந்தில் தனது தாயுடன் மனு அளிக்க வந்தார். இதில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டணர். கூலி தொழிலாளியான அவர் தனது தாயுடன் வசித்து வருவதாகவும் இவரது நிலத்தினை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியுள்ளதாக கூறி மனு கொடுத்தார்.
Sorry, no posts matched your criteria.