India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம் அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரா (60) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து மருதூர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பசுபதி (27) என்பவர், மூதாட்டி அணிந்திருந்த 2½ பவுன் நகைக்காக வீட்டில் தனியாக வசித்து வந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் (ஜூலை 10) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து சம்பவத்தில் கைதான கேட் கீப்பர் உட்பட 11 பேரிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி ரயில்வே கோட்ட மூத்த துணை பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விபத்து நடப்பதற்கு முன் கொடுக்கப்பட்ட தகவல்கள், விபத்து நடந்ததும் வந்த முதல் தகவல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் என்னை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT NOW <<17020535>>தொடர்ச்சி <<>>

<

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மாணவர்கள் பயின்ற பள்ளியில் இன்று (ஜூலை.10) வியாழக்கிழமை நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில், கண்ணீருடன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியது பார்ப்போரை கலங்கச் செய்வதாக இருந்தது.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ரெயில் மோதிய இடத்தில் ரெயில்வே முதன்மை பாதுகாப்பு உண்மை கண்டறியும் குழுவினர் நேற்று மாலை விசாரணை நடத்தினர். அப்போது ஓரிரு நாட்களில் பொது மேலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறினர்.

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நேற்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.