Cuddalore

News September 5, 2024

தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

சிதம்பரம் கோயில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 2014 – 2024ஆம் ஆண்டு வரையிலான வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் பராமரிப்புக்கும், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது? காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News September 5, 2024

கடலூர் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

image

கடலூர் உழவர் சந்தை எதிரில் நடைபாதை வியாபாரிகள் சாலை ஓரத்தில் கடைகள் வைத்திருந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து அங்கு சென்ற கடலூர் போக்குவரத்து போலீசார், ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நடைபாதையில் கடை வைத்திருந்தவர்களிடம் பேரிகார்டுகளுக்கு வெளியில் கடைகளை வைக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

News September 5, 2024

வகுப்பறை கட்ட இடம் தேர்வு: ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் துறைமுகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (4.9.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 5, 2024

கடலூரில் கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா கோ.சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது குறித்து பார்வையிட்டதோடு, கணினி ஆய்வகத்தில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அவர்கள் நேற்று (செப்.04) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 5, 2024

கல்வி நிறுவனகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் 1.1.2011-ற்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 31.1.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 5, 2024

முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு 12.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் தங்களது கோரிக்கை மனுவை இரு பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 4, 2024

கடலூர்: ரோந்துப் பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (04/09/2024) கடலூர் காவல் ஆய்வாளர் தீபா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

கடலூரில் பிஎஸ்என்எல் விற்பனை முகவராக அரிய வாய்ப்பு

image

கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஎஸ்என்எல் சிம் கார்டு மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளின் விற்பனையை மேம்படுத்தும் வகையில் கடலூரில் விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான விபரங்களுக்கு www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 4, 2024

கடலூரில் பிஎஸ்என்எல் விற்பனை முகவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிஎஸ்என்எல் சிம் கார்டு மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளின் விற்பனையை மேம்படுத்தும் வகையில் கடலூரில் விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான விபரங்களுக்கு www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 4, 2024

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து

image

திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் விருது பெறும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை கடலூர் மாநகர திமுக செயலாளர் ராஜா நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன்,புகழேந்தி,மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் மூவேந்தன்,பகுதி துணை செயலாளர் கார் வெங்கடேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!