India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வள்ளி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி – சென்னை செல்லும் சோழன் அதிவிரைவு ரயில் நாளை 10ஆம் தேதி அன்று திருச்சியில் இருந்து அரியலூர், விருத்தாச்சலம், நெய்வேலி, கடலூர் துறைமுகம், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும். எனவே நாளை ஒரு நாள் மட்டும் தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக செல்லாது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் கீழ் அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 140 அங்கன்வாடி மையங்களை நவீன முறையில் தரம் உயர்த்த ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில், 684 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட நேரடியாக அனுமதி கிடையாது. கிராம ஊராட்சிகளில் மனை அனுமதி மற்றும், கட்டட வரைபட அனுமதி இணையம் மூலம் மட்டுமே பெற வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. தவறினால், வீடுகள் தொழில் நிறுவனங்களுக்கு வீட்டு வரி, சொத்து வரி வழங்கப்பட மாட்டாது. புதிய குடிநீர், மின் இணைப்புகள் இதன் அடிப்படையிலேயே இனி வழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (08/09/2024) கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை மாவட்டங்களில் ஒன்றாம் எண் புயல் கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் அணுகு கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று (07.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை வேளாண் மையங்களிலும் நாளை முதல் பண மில்லா பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் கூறுகையில், வேளாண் மையங்களில் இருந்து வழங்கப்படும் விதை, உரங்கள், பாதுகாப்பு மருந்துகள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட இடுபொருட்களையும் விவசாயிகள் தங்களது ஏ.டி.எம். கார்டு மற்றும் யு.பி.ஐ. அடையாள எண் மூலமாக பெற முடியும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி 10.9.2024 முதல் 24.9.2024 வரை கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ஏற்கனவே www.sdat.tn.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.