India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியில் சேர இயலாத மாணவர்கள், கடலூர் புதுப்பாளையம் புனித அன்னாள் பள்ளியில் நாளை நடைபெற உள்ள ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உயர் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், பிற வசதிகளும் மேற்கொண்டு தரப்படும்.
கடலூர் அருகே வரக்கால்பட்டு பகுதி விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பயிர்களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா? என விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் செப்.15 முதல் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இல்லம் தோறும் திமுக உறுப்பினர் சேர்க்கை துவங்குதல் மற்றும் செப்.17 பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டல அலுவலகத்திலுள்ள வட்ட செயல்முறை கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படும் விதம் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (10.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் விதி மீறல்கள் காணப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிதம்பரம் பகுதியில் நள்ளிரவு 11 மணி அளவில் சுற்றித்திரிந்த மாணவிகள் நான்கு பேரையும் சிதம்பரம் போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் கடலூர் பள்ளியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் அவர்களை மீட்டு கடலூர் அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
கடலூர் புதுநகரில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் மாயமான 4 மாணவிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர் தெற்கு ஒன்றியம், தீவளூர் கிராமத்தில் இருந்து பெண்ணாடம் வரையிலான புதிய அரசு பேருந்து வழித்தடங்களை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், சி.வெ.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குமாரக்குடி பகுதியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அவ்வழியாகச் சென்ற காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் முன்புறம் உருகுலைந்தது. விபத்தில் படுகாயமடைந்த சாலை ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன் மற்றும் கார் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரவிச்சந்திரன் செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
சிதம்பரம் மின் நகர் பகுதியை சேர்ந்தவர் சமீரா பேகம், நேற்று பணம் எடுப்பதற்காக அருகில் இருந்த ஏ.டி.எம்-க்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த நபரிடம் ஏ.டி.எம் கார்டு மற்றும் கடவு எண்னை கூற அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.90,000 பணத்தை அந்நபர் திருடிச்சென்றுள்ளார். இது குறித்து சமீரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.