Cuddalore

News August 8, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

குறிஞ்சிப்பாடி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் நாளை (ஆகஸ்ட் 8) ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை ஆக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2025

கடலூர்: அரசு கல்லூரி மாணவன் வெண்கல பதக்கம்

image

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர் லோகேஸ்வரன் சர்வதேச அளவில் நடைபெற்ற தேசிய சீனியர் பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். இது இவரது இரண்டாவது சர்வதேச பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கடலூர் ஆசிரியர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News August 7, 2025

கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக குடற்புழு மாத்திரைகள் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று (ஆகஸ்ட் 7) ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News August 7, 2025

கடலூர்: சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலை!

image

கடலூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker, IT Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.20,000 வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இந்த லிங்கில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடலூர் மாவட்ட சமூக நல அலுவலத்திற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். நாளை 8 ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்க!

News August 7, 2025

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க

News August 7, 2025

கடலூர்: சொந்த ஊரில் ரூ.96,395 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள 47 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

கடலூர்: சிறுமியிடம் அத்துமீறல்-போக்சோவில் வி.ஏ.ஓ கைது!

image

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நேற்று (ஆக.06) பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

News August 7, 2025

சிறுமியிடம் அத்துமீறிய விஏஓ போக்சோவில் கைது

image

விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் இன்று பாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

News August 7, 2025

இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஆக.6) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!