India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலுார் மாவட்டத்தில், மாதந்தோறும் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் 14.9.2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.
பிச்சாவரத்தில் சதுப்பு நில பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் ரூ.115.15 கோடியில் இத்திட்டம் செயல்படுத்த இருந்தது. தற்போது இத்திட்டம் முத்துப்பேட்டைக்கு பதிலாக பிச்சாவரத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் அரசுக்கு அனுப்ப, வனத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஒரு வருட காலம் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான முதல் நிலை – முதன்மை நிலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே இதில் சேர விரும்பும் 21 முதல் 36 வயது நிரம்பிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். Share it.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் எஸ்.ஐ. கதிரவன் மற்றும் போலீசார் இன்று கடலூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த வசந்தராயன் பாளையத்தை சேர்ந்த வைத்தியநாதன் மகன் மணிகண்டன் (39) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திட்டக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (செப்.11) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கட்டுமான பணிகளை விரைந்து, தரமாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய e-DPC இணையத்தில் 1.9.2024 முதல் விளை நிலத்தின் பட்டா நகல், சிட்டா அடங்கல், ஆதார் வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். இதற்காக விவசாயிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே பி.முட்லூர் ஆனையாங்குப்பம் விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விபத்து. லாரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு, இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் எஸ்.ஐ. கதிரவன் மற்றும் போலீசார் இன்று கடலூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த வசந்தராயன் பாளையத்தை சேர்ந்த வைத்தியநாதன் மகன் மணிகண்டன் (39) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (11/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கவியரசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் கோபிகுமார் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட டி.இளமங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.