India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் நாளை (ஆகஸ்ட் 9) ஆம் தேதி திருத்தேர் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம், சாவடி, எல்லைக்கல் வீதி, சின்னகடைவீதி, கடைவீதி, பழந்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!

மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத் திட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் கடலூரில் இன்று (ஆக.8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூரில் இன்று (ஆகஸ்ட் 08) வார்டு 10,11,12 ஆகிய பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த முகாமில் 10, 11 மற்றும் 12 ஆம் வார்டுகளுக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதார் அட்டையில் முகவரி மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற்றனர்.

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக வகைமாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <

தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில், 1 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு வரும் ஆக.11 அன்று 9,14,851 நபர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படவுள்ளது. இப்பணியில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஊட்டச்சத்துத்துறையைச் சேர்ந்த 4,688 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

கிருமாம்பாக்கம் அருகே உள்ள கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர், பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று (ஆக.,8) நடைபெற உள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் இலகுரக வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

▶️ மாவட்ட ஆட்சியர் – சிபி ஆதித்யா செந்தில் குமார்
▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – எஸ்.ஜெயக்குமார்
▶️ மாவட்ட வருவாய் அலுவலர் – ம. ராஜசேகரன்
▶️ கடலூர் மாநகராட்சி ஆணையர் – எஸ்.அனு
▶️ திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை – ரா. சரண்யா
▶️ இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.