Cuddalore

News August 11, 2025

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

image

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆக.11) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில், போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், காவல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்’’ என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

News August 11, 2025

மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடம் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று பேசுகையில், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News August 11, 2025

கடலூர்: சொந்த ஊரில் அரசு வேலை

image

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 10th தேர்ச்சி பெற்றவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை தேடுபவர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க..

News August 11, 2025

கடலூர்: அழகுக்கலை பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு

image

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவுகள் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி-ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு பி.எஸ்.சி நர்சிங், பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.

News August 11, 2025

கடலூர்: அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 10, 2025

கடலூரில் மக்களின் கவனத்திற்கு !

image

கடலூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 10, 2025

கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

image

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யுங்க..

News August 10, 2025

கடலூர்: சேவை இல்லத்தில் உணவை ஆட்சியர் ஆய்வு

image

கடலூரில் உள்ள சேவை இல்லத்தில் நேற்று தயார் செய்யப்பட்ட உணவை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் நாள்தோறும் சேவை இல்லத்தை தூய்மையாக பராமரிப்பதோடு, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் காவலர்கள், கண்காணிப்பாளர்கள் விடுதியினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News August 10, 2025

மஞ்சக்குப்பம்: மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

image

மஞ்சக்குப்பம் சமூக நீதி மாணவர் விடுதியில் மாணவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, உணவு, இடவசதிகள், தங்கும் அறை வசதி, மின் விளக்கு, மின்விசிறி வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், கண்காணிப்பு கேமரா தொடர் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் நேற்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!