Cuddalore

News October 5, 2024

கடலூர் ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவு

image

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக, தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், காரைக்கால் மாவட்டத்திலும் 3,000 ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றை மீட்க கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

News October 5, 2024

மீன்குஞ்சு உற்பத்தி செய்யும் பணியை ஆட்சியர் ஆய்வு

image

காட்டுமன்னார்கோயில் வட்டம், லால்பேட்டையில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் பரவணாறு உபவடிநிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விரால் மீன்குஞ்சு பொரிப்பகத்தில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (05.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News October 5, 2024

பண்ருட்டி வாலிபருக்கு ஆயுள் தண்டனை

image

பண்ருட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த +2 மாணவியும் கடந்த 2020ஆம் ஆண்டு காதலித்து வந்தனர். இந்நிலையில் மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் விஷம் அருந்தியுள்ளனர். இந்நிலையில் மாணவி உயிரிழந்தார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

News October 4, 2024

கடலூர் மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (04/10/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கவியரசன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ், நெய்வேலி உதவி ஆய்வாளர் ராஜாங்கம், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

கம்பு வயல்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரம், திம்மராவுத்தன்குப்பம் ஊராட்சியில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள கம்பு வயல் மற்றும் சொட்டுநீர் பாசனத் திட்ட வயல் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (04.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் உடனிருந்தார்.

News October 4, 2024

ஆடாதொடா நடும் பணியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரம், நெய்வேலி மாநில எண்ணெய் வித்து பண்ணையில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நொச்சி, ஆடாதொடா நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (04.09.2024) துவக்கி வைத்தார். அப்போது பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News October 4, 2024

சாதனை படைத்த பெண் காவலரை பாராட்டிய எஸ்.பி.

image

தமிழக காவல்துறை மாநில அளவிலான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி 26.09.2024 முதல் 28.09.2024 வரை சென்னை கமாண்டோ பள்ளி சார்பில் ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது. இதில் 300 யாட்ஸ் Insas துப்பாக்கி சுடும் போட்டியில் நெய்வேலி நகர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரி 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை இன்று கடலூர் எஸ்.பி.ராஜாராம் பாராட்டினார்.

News October 4, 2024

கடலூரில் 50 நிறுவனங்களுக்கு அபராதம்

image

தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தன்று கடலூர் மாவட்டத்தில் 50 நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காததும், பணியாளர்கள் பணிபுரிய முன் அனுமதி பெறாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 50 கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News October 4, 2024

கடலூரில் பிரபல ரவுடி குண்டாஸில் கைது

image

புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த தாடி அய்யனார் (30) மீது புதுச்சேரி மங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது. மேலும் இவர் மீது புதுச்சேரி மாநிலம் மற்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 21 வழக்குகள் உள்ளது. இதனால் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் தாடி அய்யனார் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News October 4, 2024

காட்டுமன்னார்கோயில் அருகே கர்ப்பிணி தற்கொலை

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த செட்டிகட்டளையை சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி பவித்ரா (25). திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. கர்ப்பமாக உள்ள பவித்ரா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார். இந்நிலையில் நேற்று பவித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!