India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லிக்குப்பம் ரஹ்மான் நகரைச் சேர்ந்த பாபு என்பவர் குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து 2லட்சம் மதிப்புள்ள நகைகள் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பெரிய சோழ வள்ளி சேர்ந்த குப்புசாமி மகன் சிற்றரசு(22) ,சரவணன் மகன் நித்திஷ் (19)ஆகியோரை நேற்று போலிசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை கடலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அனு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதை கடலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.10.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அனு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளருக்கான (Salesman) 152 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbmyt.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இந்த சிறப்பு மெமு ரயில் (06007) நாளை அதிகாலை 12.15 புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6.50 சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, பண்ருட்டி, கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் வழியாக தஞ்சாவூர் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடலூர் வள்ளலார் மையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானம் பணிகள் மேற்கொள்ள அரசுக்கு அனுமதி. வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும், மேலும் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ஏழுமலை (52). இவர் இன்று இரவு 7.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சென்னை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் உடல் நசுங்கிய ஏழுமலை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சீரங்குப்பத்தை சேர்ந்தவர் சேட்டு (60). இவர் இன்று அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தை மிஷின் மூலம் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக தென்னை மரம் சாய்ந்து அவர் மீதே விழுந்தது. இதில் சேட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலை தேர்வு 14.9.2024 அன்று நடந்த நிலையில், முதன்மை தேர்விற்கான தமிழ் தகுதித்தேர்வு, எழுத்து தேர்வு, கொள்குறிவகை எழுத்து தேர்வு ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சலவை தொழிலாளர்களுக்கு திரவ பெட்ரோலிய வாயு தேய்ப்பு பெட்டி வழங்கப்பட உள்ளது. இந்த தேய்ப்பு பெட்டிகளைப் பெற கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாமென கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.