India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கால்நடை பராமரிப்பு செலவினை குறைப்பதில் பசுந்தீவனம் முக்கியமானது. பசுந்தீவனம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு விதைகள் இலவசமாக வழங்கப்படும். மானாவரி நிலங்களில் பசுந்தீவனம் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு தீவன சோளம் 12 கிலோ, தட்டைப்பயிர் 4 கிலோ விதைகள் முழு மானியத்துடன் இலவசமாக வழங்கப்படும் ஒரு விவசாயி 2 ஏக்கர் வரை பயன்பெறலாம். கால்நடை விவசாயிகள் கால்நடை நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் கடலூர் சுற்றுவட்டார மக்கள் மற்றும் கடலூர் மாநகர மக்கள் புத்தாடைகளையும் பொருட்களையும் வாங்குவதற்காக கடலூர் மாநகரில் உள்ள கடைவீதிகளில் அலைமோதுகின்றனர். பொதுமக்கள் இரு சக்கர வாகனம், கார்கள் ஆகியவற்றில் அதிகமாக பயணிக்கின்றனர். இதனால், நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ராமநத்தம் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் திருஞானம் (62). இவருக்கும் இவரது மனைவி அமுதாவுக்கும் (58) இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த திருஞானம் இன்று அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தினம் தோறும் இரவு காவல்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.,28) கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் உதவி ஆய்வாளர் சங்கர், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சண்முகம், நெய்வேலி உதவி ஆய்வாளர் கவின்நிலவன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. தாழநல்லூர் ரயில் நிலையத்தில் மதுரை-விழுப்புரம் விரைவு பேசஞ்சர் ரயில் நின்று செல்ல வேண்டும் என்பதனை வலியுறுத்தி வரும் நவம்பர், 12ஆம் தேதி பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அக்கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இயற்கை முறை விவசாயம் அதிக அளவு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசாங்கம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து ஒரு லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு பெற சம்பந்தப்பட்ட வட்டார அலுவலக மாவட்ட தோட்டக்கலை அலுவலங்களில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ளதால் அக்டோபர் மாத சம்பளத்தை பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கடலூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இது குறித்து முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் போனஸ், தீபாவளிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாத நிலையில் சம்பளத்தை முன்னதாக வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த 11 வயது பள்ளி மாணவிக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது என்ஜினியரிங் மாணவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் கடலூர் வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.