India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கிட கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (செப் 12) கடலூர், கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் கல்விக்கடன் கோரும் மாணவ, மாணவியர்கள்<

கடலூர் மாவட்டம், பண்ருட்டி மலட்டாற்றின் குறுக்கே நபார்டு நிதியின் கீழ் ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் திருவாமூர்-சோமாசிப்பாளையம் சாலையில் இணைப்பு உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை நிறைந்தது மனம் திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

திட்டக்குடி, கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரைகள் மற்றும் வாய்க்கால்களை சீரமைக்க ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில், நீர்த்தேக்க கரைகள், முதன்மை மற்றும் உபரி கால்வாய்கள் புனரமைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கை திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, நர்சிங் கல்லூரி மாணவிகள் சென்னையில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 11 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தனர். அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன், நர்சிங் கல்லூரி முதல்வர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளைப் பாராட்டினர்.

கடலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மின்துறை கோட்ட அலுவலகத்தில், இன்று (செப்.11) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், விருத்தாசலம் கோட்ட அலுவலகத்தைச் சேர்ந்த உட் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்துறை சம்பந்தமாக குறைகளைக் கூறி நிவர்த்தி பெறலாம் என கோட்ட செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11/09/2025) சிதம்பரம் செங்குந்தர் திருமண மண்டபம்; வரக்கால்பட்டு அபிராமி திருமண மண்டபம்; எய்யலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி; உச்சிமேடு சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு லயன் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து பயன்பெறுங்க.

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் மாவட்டம் நாணமேடு பகுதியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, தென்பெண்ணை ஆற்றின் கரைகள் பலப்படுத்துவது குறித்து இன்று (செப்டம்பர் 10) புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.