India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி, காரைக்காலில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கடலூர் மாவட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாளை (நவ.27) கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கனமழை – அவசரகால மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 வாட்ஸ்அப் 94458 69848 மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்களான கடலூர், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ்அப் 94899 30520 என்ற என்னில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மேலும் பொதுமக்கள் டி.என் அலர்ட் செயலி மூலம் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கட்டுள்ளது. இதன் காரணமாக காலை 10 வரை 9 மாவட்டங்களில் மிதிகமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும். இதனால் நாளை மறுநாள் கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருப்பதாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தூரத்தில் புயல் உருவாகி உள்ளதை குறிப்பதாகும். இதன் காரணமாக இன்று கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆழங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன் மனைவி திரிபுரசுந்தரி (50). செல்லையன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், கடன் சுமை அதிகமாக இருந்ததாலும் திரிபுரசுந்தரி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று திரிபுரசுந்தரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு சென்னை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவ.25 (திங்கள்) முதல் நவ.28 (வியாழன்) வரை கடலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் வடகிருப்பை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் இரு தினங்களுக்கு முன்பு இரவு அண்ணாமலை நகர் திருவக்களம் சந்தை பழம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மெயின் ரோடு தெருவை சேர்ந்த முருகானந்தம் கோபால் இருவரும் முன்விரோத காரணமாக ரஞ்சித் குமாரை நேற்று தாக்கியுள்ளனர். ரஞ்சித் குமார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து முருகானந்தம் கோபால் இருவரையும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.