India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இன்று (13.9.2025) பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142-290039, 9499055907 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (செப்.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்னும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களே… SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள்<

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நகர செயலாளர் தனசேகரன் என்வர் நகரம் முழுவதும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி உள்ளார். போஸ்டரில் “பூனைக்கு மணி கட்டுவது யார்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. மேலும் செங்கோட்டையன் கருத்தைப் வரவேற்பதாகவும் அதில், குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடலூர் அதிமுக அரசியல் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் இவர், நேற்று(செப்.11) சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷன் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் அஜித்குமாரை மீட்ட போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்த அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

வேப்பூர் அடுத்த தீவலூரை சேர்ந்தவர் சுதாகர் மகன் சுனில் கண்ணன் (15). அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் சுனில் கண்ணன் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வலது காதில் பாம்பு கடித்தது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுனில் கண்ணன் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று (செப்.12) கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

கடலூர் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலைக்கு செல்ல ஆசை உள்ளவர்கள், உடனே Register பண்ணுங்க!
⏩ துறை: மத்திய அரசு
⏩ தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ மாத சம்பளம்: ரூ. 78,450/-
⏩ மொத்தம் பணியிடங்கள்: 120
⏩ வயது வரம்பு: 21-30
⏩ கடைசி தேதி: 30.09.2025
⏩இணைய வழியில் விண்ணப்பிக்க: <
⏩ இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அத்தியநல்லூரை சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி சுந்தரி (50). இவர் நேற்று மாலை 5 மணி அளவில் அத்தியநல்லூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்த போது, மின்னல் தாக்கியதில் சுந்தரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.