Cuddalore

News December 9, 2024

கடலூரில் 684 மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 684 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News December 9, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபிர்புரஸ்கார்” விருது 2025 ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவின்போது முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெற தகுதியான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் <>LINK <<>> என்ற இணையதளம் வழியாக 15.12.2024 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News December 9, 2024

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் வேலை!

image

அசோசியஸ் அட்வைசர் பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. <>LINK<<>>

News December 8, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

மாற்றுத்திறனாளிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் பெற்று பழுதடைந்து இருப்பின் மீண்டும் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு அறை எண் 112, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ 16.12.2024-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 8, 2024

மத்திய குழுவினரிடம் கூடுதல் நிதி கேட்டு அமைச்சர் மனு அளித்தார்

image

ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய குழுவினரிடம் விவசாய விளைநிலங்கள், சாலைகள், மேம்பாலங்கள், வீடுகள் மற்றும் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ கணேசன் கோரிக்கை மனு அளித்தார்.

News December 8, 2024

தொழிலாளியின் குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பலானது

image

நடுவீரப்பட்டு அருகே உள்ள பாலூரை சேர்ந்த தொழிலாளியான கார்த்திக் (40) என்பவர், நேற்று இரவு தனது குடிசை வீட்டில் சாமி கும்பிட விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக குடிசையின் மீது தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் மளமளவென எரிந்த தீ குடிசை வீடு முழுவதும் எரிந்தது. இதில் அந்த குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2024

மத்திய குழுவினர் நாளை 6 இடங்களில் ஆய்வு

image

ஃபெஞ்சல் புயல் மழைவெள்ள சேதங்களை ஆய்வு செய்ய கடலூர் வந்துள்ள மத்திய குழுவினர் இன்று நெய்வேலியில் தங்கியுள்ளனர். இந்த குழுவினர் நாளை (08/12/2024) காலை 10 மணியளவில் மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, அழகியநத்தம், குண்டுஉப்பலவாடி கண்டக்காடு, நாணமேடு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பல்வேறு வகையான சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 7, 2024

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் 1,390 வீடுகள் சேதம்

image

கடலூா மாவட்டத்தில் கனமழையின் காரணமாகவும், வெள்ள பெருக்கின் காரணமாகவும் 1,113 குடிசை வீடுகளும், 285 ஓட்டு வீடுகள் என மொத்தம் 1,390 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2000 வழங்கல்

image

கடலூரில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக முதல்வர் அறிவித்த 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியினை, தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார். உடன் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News December 6, 2024

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு: உயர் நீதிமன்றம் அனுமதி

image

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் நிலத்தின் சுவாதீன உரிமை பெற்றவர் எழுதிய உயிலின்படி, குறிப்பிட்ட தீட்சிதர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். நிலத்தின் பட்டா இன்னும் கோயிலின் பெயரிலேயே உள்ளது என அறநிலையத்துறை வாதம் செய்தது.

error: Content is protected !!