Cuddalore

News September 18, 2025

கடலூர் மக்களே இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

image

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப்.18) நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூர் அடுத்த போத்திரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருநாரையூர் பகுதியில் உள்ள சைக்ளோன் ஷெல்டர், பரங்கிப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட சிவம் மஹால் மற்றும் விருத்தாசலம் திருமலை திருச்சானூர் மண்டபம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடக்கிறது.

News September 18, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

கடலூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<> myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

கடலூர்: லஞ்சம் வாங்கிய காவலர் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் லாட்டரி டிக்கெட், போதை பொருட்கள் போன்றவற்றை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் முதுநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை மற்றும் மாமூல் வாங்குவதற்கு துணை போனதாக எழுந்த புகாரில் சிக்கிய தனிப்பிரிவு போலீஸ்காரர் பாபு, கடலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

News September 17, 2025

கடலூர்: செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News September 17, 2025

கடலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

கடலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <>இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

கடலூர்: இன்று சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம், கோவிலானூர் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பள்ளி, நல்லூர் வட்டம், தொளார் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் பண்ருட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இன்று (17/09/2025) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு நடைபெற உள்ளது‌. இதில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News September 17, 2025

கடலூர்: கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

image

குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் பாஸ்கர் (44). இவரது மனைவி சத்தியவாணி (42). இவர் பெரியார் நகரில் உள்ள ராமலிங்கம் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று காலை வீட்டு தோட்டத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகில் வேலை செய்யும் போது தவறி கிணற்றில் உள்ளே விழுந்த சத்தியவாணி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News September 17, 2025

கடலூர்: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

கடலூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க.<> Click<<>> Here
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

கடலூர்: ரூ.96 லட்சம் மோசடி செய்த பெண் கைது

image

புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன் (39). இவரை நிதி நிறுவன இயக்குனர் ஆக்குவதாக கூறி முதலியார்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், அவரது மனைவி ஐஸ்வர்யா, அவரது தாய் முனியம்மாள் என்கிற ஜீவா ஆகியோர் கடலூரில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து ரூ.96 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து முனியம்மாளை நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!