India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான கால்நடைகளுக்கு தீவனப்புல் வேண்டும் என்று அரசுக்கு எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று உடனடியாக கால்நடை துறை சார்பாக நாலரை டன் (4½) தீவன புல் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக திருநாரையூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு தீவன புல் விநியோகம் துவங்கியது.
கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், வங்கி புத்தகம் நகல், புகைப்படம், சிறு குறு விவசாய சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் கடலூர், சிதம்பரம், விருத்தாசலத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்திடவும், சேதம் அடைந்த வீடுகளைக் கண்டறிந்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட மக்கள் உங்கள் பான் கார்ட்-ஐ புதுபிப்பதாக கூறி சைபர் குற்றவாளிகள் தொலைபேசி மூலம் அழைத்து ஓ.டி.பி-யை (OTP-யை) கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும், நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால் உங்கள் முகவரிக்கு அரசு நேரடியாக அனுப்பும் எனவும் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட மக்கள் உங்கள் பான் கார்ட்-ஐ புதுபிப்பதாக கூறி சைபர் குற்றவாளிகள் தொலைபேசி மூலம் அழைத்து ஓ.டி.பி-யை (OTP-யை) கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும், நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால் உங்கள் முகவரிக்கு அரசு நேரடியாக அனுப்பவும் எனவும் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி பகுதிகளில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் 382 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் வட்டம், கோவிந்தநல்லூர் ஊராட்சியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு ஆர்.சி. உதவி பெறும் நடுநிலைப்பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோயில் அடுத்த கோவிந்தநல்லூர் கிராமத்தில் கனமழையால் பாதிப்படைந்து வீடுகளில் தங்க முடியாமல் அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் தங்கியுள்ள கிராம மக்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம் தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் அமர்நாத், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் ஜெயந்தி, பண்ருட்டி உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் கோபிநாத் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வராயன் மலைத் தொடர்ச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், கோமுகி அணையிலிருந்து 2000 கன அடி உபரி நீர் ஆற்றின் மிகை போக்கி மற்றும் அணையின் பிரதான ஷட்டர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட கொத்தனூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.