Cuddalore

News September 21, 2025

கடலூர்: காதலிக்க வற்புறுத்தியவர் கைது

image

கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர், சம்பவத்தன்று பிளஸ்-2 படிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து மாணவி, தனது தாயிடம் தெரிவிக்கவே, அவர் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 21, 2025

கடலூர்: தாய்-மகள் கொலை; அதிரடி தீர்ப்பு

image

புதுச்சேரியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி விஜயலட்சுமி (48) மற்றும் மகள் மாதங்கியை (24), கடந்த 1.3.2021 அன்று கடலூர் சிங்கிரிகுடியில் வைத்து இளநீர் வியாபாரி இருசப்பன் (49) என்பவர் நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருசப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி குலசேகரன் நேற்று உத்தரவிட்டார்.

News September 21, 2025

கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.20) இரவு 10 மணி முதல் இன்று (செப்.21) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 21, 2025

சேத்தியாத்தோப்பில் இன்று அதிகபட்ச மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 20) காலை 8.30 மணி நிலவரப்படி சேத்தியாத்தோப்பு 38 மில்லி மீட்டர், புவனகிரி 21 மில்லி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 14.2 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 5 மில்லி மீட்டர், பெலாந்துறை 4.4 மில்லி மீட்டர், லால்பேட்டை 4 மில்லி மீட்டர், பெலாந்துறை 3.2 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News September 20, 2025

கடலூர் மக்களே: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

கடலூர் மக்களே. இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவும் உள்ளம் கொண்ட கடலூர் மக்களே இதனை LIKE& SHARE பண்ணுங்க

News September 20, 2025

சிதம்பரம்: லாட்டரி வியாபாரி குண்டாஸில் கைது

image

சிதம்பரம் கே.கே.சி.நகரை சேர்ந்தவர் ஷம்முபாய் என்ற நசீர் (56). இவர் மீது சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருவதோடு, 4 லாட்டரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவரது குற்றசெயலை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி, லாட்டரி வியாபாரியான ஷம்முபாய் நேற்று குண்டாஸில் கைது செய்யப்பட்டார்.

News September 20, 2025

கடலூர்: B.E போதும், ரூ.50,000 சம்பளம்!

image

கடலூர் பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, நாளைக்குள் (செப்.21) விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 20, 2025

கடலூர்: ரூ.75,000 கையாடல்; இன்ஸ்பெக்டர் மாற்றம்

image

ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா கடந்த 8-9-2025 அன்று மூதாட்டி ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபாகரன் (39) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தார். இந்நிலையில் பிரபாகரனிடம் பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் பிருந்தா கணக்கு காட்டாமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி உமா, இன்ஸ்பெக்டர் பிருந்தாவை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.

News September 20, 2025

கடலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கடலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<> இங்கே கிளிக்<<>> செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

கடலூர்: கஞ்சா விற்பனை; தட்டி தூக்கிய போலீசார்

image

மந்தாரக்குப்பம் போலீசார் நேற்று மந்தாரக்குப்பம் ஏ.எல்.சி. சர்ச் பின்புறம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்த அப்பு (எ) சிவகுமார் (25), வடக்குவெள்ளூரை சேர்ந்த சுதாகர் (26), ராமமூர்த்தி (26), விஜய் (27), பெரியாக்குறிச்சியை சேர்ந்த சாலமன் (26), பாலமுருகன் (25) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

error: Content is protected !!