India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதிகள் உள்ளன. இந்த பிரிவில் 6 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, கடந்த 11 மாதங்களில் 2,496 ஆண் மற்றும் 2,418 பெண் குழந்தைகள் என மொத்தம் 4,914 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 627 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
நெய்வேலியில் அமைந்துள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 167 பட்டதாரி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சம்பளம், வயது வரம்பை இந்த இணையதளத்தில் <
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்., சகோதரத்துவம் தழைக்க உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரி. லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இன்றைய (டிச 25) நிலவரப்படி ஏரியில் 47.15 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு 1104 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 119 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த ஒருவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சர்வதேச மகளிர் தினம் அன்று ஒளவையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற தகுதிவாய்ந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 31.12.2024-க்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ. 3 இலட்சம் வரை பிணையமில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் ‘www.msmeonline.in.gov.in’ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
செம்மங்குப்பம், கடலூர் துணை மின் நிலையங்களில் நாளை (டிச 26) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானூர், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பா ரெட்டிப்பாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைபேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர் ஓடை பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்களை நிரப்ப கோரி பட்டதாரி ஆசிரியர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தனியார் நிறுவன பள்ளியில் கூட எங்களுக்கு வேலை தர மறுக்கிறார்கள் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பண்ருட்டி கொஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சக்திகிருஷ்ணன். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பற்றி தவறான தகவல்களையும், ஆபாசமான செய்திகளையும் முகநூல் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தம்பி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சக்திகிருஷ்ணன் மீது இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காடாம்புலியூர் அடுத்த சின்னப்புறங்கனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிருத்விராஜ், நேற்று தனது மனைவி பிரியங்கா மற்றும் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அரசு வேலை வழங்க கோரி டீசலை ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுநகர் போலீசார் பிருத்விராஜ், அவரது மனைவி மற்றும் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
Sorry, no posts matched your criteria.