Cuddalore

News February 25, 2025

விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில்
2024 -ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், சுற்றுப்புறச் சூழல் மீட்புக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதவாது தனிநபர்களுக்கு வழங்கபடவுள்ளது.
தகுதியானவர்கள் விண்ணப்பத்தினை www.tnpcb.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவித்துள்ளார.

News February 25, 2025

சிதம்பரம்: டீ காபியின் விலை கிடு கிடு உயர்வு

image

சிதம்பரத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டீக்கடை மற்றும் காப்பி கடைகளில் டீ, காபியின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. டி பத்து ரூபாய் காசி 15 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்சமயம் டீ ₹12 முதல் ₹15 ரூபாய் வரையிலும் காபி ₹20 வரையிலும் விளைவு செய்யப்பட்டுள்ளது.
டீ, மற்றும் காபித்தூளின் விலை மிக கடுமையாக உயர்ந்து விட்டதால் இந்த விளைவுகள் என கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

News February 24, 2025

காட்டுமன்னார்கோயிலில் 26ஆம் தேதி ஆட்சியர் களஆய்வு

image

காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 26-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து களஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

கடலூரில் 49 முதல்வர் மருந்தகம் திறப்பு

image

1,000 இடங்களில் தமிழகம் முழுவதும் இன்று முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்படுகிறது. கோயமுத்தூர் மாவட்டத்திற்கு 42 மருந்தகமும், மதுரை மாவட்டத்திற்கு 52 மருந்தகமும், கடலூர் மாவட்டத்திற்கு 49 மருந்தகமும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 40 மருந்தகம் திறக்கப்பட உள்ளன. பிரதமரின் மக்கள் மருந்தகம் உள்ளிட்ட எந்த மருந்தகளிலும் இல்லாத வகையில் சந்தை மதிப்பை விட 75% வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

News February 23, 2025

சிதம்பரம் அருகே எந்திரம் கவிழ்ந்து மாணவன் பலி

image

சிதம்பரம் அருகே புதுச்சித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் நேற்று மாலை வயலில் உழவு எந்திரம் தில் அமர வைத்து எந்திரத்தில் சுற்றி வந்தனர் எதிர்பாராத விதமாக எந்திரம் கவிழ்ந்து மாணவர்கள் இருவர் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார் அதில் ஒருவர் படுகாயம் அவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவிட்டனர் சிகிச்சை பலன்னிறி உயிரிழந்தார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

News February 23, 2025

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று (23/02/2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2025

கடலூரில் மஞ்சப்பை விருது பெற அழைப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பொருட்களை பயன்படுத்த பங்களிப்பு செய்த பள்ளி கல்லூரி வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 18 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். இதன் விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் தெரிவிட்டுள்ளார்.

News February 22, 2025

கடலூர்: “APPA” புதிய செயலி அறிமுகம்

image

கடலூர் விருத்தாசலம் அடுத்த திருப்பெயர் பகுதியில் பள்ளி கல்வித்துறை சார்பில் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “APPA” புதிய செயலி அறிமுகம் செய்தார். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 22, 2025

மண்டல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

image

கடலூர் மேற்கு மாவட்டம், வேப்பூர் அருகே திருப்பெயரில் “பெற்றோர்களை காப்போம்” மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.2.2025) வருகை தந்தார். உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!