Cuddalore

News March 5, 2025

விருத்தாசலம்: மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆவணங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தொடர்ந்து அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஆய்வு செய்து அறிவுரை வழங்கி வருகிறார்.

News March 5, 2025

நில அளவை; இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!

image

கடலூரில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துக்கலாம். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவை செய்யப்பட்ட பின்னர், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு <>லிங்க் <<>> இந்த இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

கடலூரில் 2000 ஆண்டு பழமையான கோயில்

image

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் பழமையான கோயில்களில் ஒன்றாகும். தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் மற்றும் இடைக்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள சிவனை ஒரு முறை வழிபடுவது காசியில் 16 முறையும், தி.மலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும் வழிபடுவதற்கு சமம் என நம்பப்படுகிறது. புலியூர் என்ற புலிக்கால் துறவி இப்பகுதியில் பாவமன்னிப்பு பெற்றதால் பாடலீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

News March 4, 2025

பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு; கடலூரில் 350 பேர் ஆப்சென்ட்

image

கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 350 பேர் ஆப்சென்ட் ஆகினர். முதல் நாளான நேற்று தமிழ் மொழிப் பாடம் தேர்வு நடந்தது. நேற்றைய தேர்வில் தொடர் விடுப்பில் இருந்த 73 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தனித்தேர்வு எழுதும் 27 மாணவர்கள், பிரெஞ்ச் மொழி விருப்ப பாடமாக எடுத்த ஒரு மாணவர் உட்பட 350 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூரில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 3, 2025

கடலூர் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் வரை மட்டுமே இயக்கப்படும், தாம்பரம் செல்லாது என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரப் பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகரப் போக்குவரத்து காவல்துறை வழங்கிய பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2025

விருத்தாசலம்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

விருத்தாசலம் பகுதியில் இன்று (மார்ச் 2) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை விருத்தாசலம் AWPS காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி (9445490570) மற்றும் நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை கம்மாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம் (9498154210) ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

கஞ்சா விற்றால் ‘குண்டாஸ்’ கடலுார் எஸ்.பி.,எச்சரிக்கை

image

கடந்த 2 மாதங்களில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 61 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாக மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி. கூறுகையில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்துள்ளார்.

News March 2, 2025

சென்னை செல்லும் கடலூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கம் மற்றும் மாதவரம் மட்டுமே இயக்கப்படும், தாம்பரம் செல்லாது என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரப் பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகரப் போக்குவரத்து காவல்துறை வழங்கிய பரிந்துரையின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 1, 2025

குறிஞ்சிப்பாடி: 39 பேருக்கு இலவச பட்டா வழங்குதல்

image

குறிஞ்சிப்பாடி வட்டம் ரங்கநாதபுரம், விருப்பாச்சி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 39 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியரால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. உடன் வருவாய்த்துறை அதிகாரிகள், திராவிட முன்னேற்றக் கழக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!