India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்டுமன்னார்கோயில் அருகே காங்கிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. தொழிலாளியான இவர், 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீசார் நேற்று (ஜன.19) மன்சூர் அலியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில், பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கான தமிழக அமைச்சர் பெரியகருப்பண்ணன் 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு என்று தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசாங்கம் ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் 13ம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இன்னும் வாங்காதவர்கள் வரும் 25 ஆம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இன்று செம்மண்டலம், செம்மங்குப்பம், முட்டூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த ஒட்டு மொத்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை காலங்களில் கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். அருகில் புதுச்சேரி மாநிலம் இருந்தாலும் பண்டிகை காலங்களில் கோடிக் கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 13, 14 மற்றும் 16 ஆகிய 3 நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 22 கோடியே 83 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடலூர் ஆல்பேட்டை, பண்ருட்டி கண்டரக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இன்று ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது. ஆற்றுத்திருவிழா நடக்கும் பகுதியில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரங்களில் 20 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறையினர் அமைக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தெரிவித்தார்.
அண்ணாமலை நகர் பல்கலைக்கழகத்தில் கோபிநாத் பேராசிரியர் வீட்டில் சிறிது சிறிதாக நகைகள் காணாமல் போய்விட்டது என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் அவர்கள் வீட்டில் பணிப்பெண் விஜயா என்பவரை விசாரித்ததில், 2 1/2 லட்சம் ரூபாய் நகைகளை திருடி வீட்டின் பின்பக்கம் பதுக்கி வைத்து தெரிய வந்தது நகையை மீட்டு அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.
108 ஆம்புலன்ஸ், இலவச தாய்-சேய் நல ஊர்தி மற்றும் இலவச அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கான மற்றும் அவசர கால மருத்துவ நுட்புனர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று (18.1.2025) கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. தகுதி உள்ள நபர்கள் தங்களின் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், முந்தைய அனுபவ சான்றிதழ் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT
கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஆல்பேட்டை, பண்ருட்டி கண்டரக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் நாளை ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஆற்றில் குளிக்கவும், இறங்கவும் தடைவிதித்து கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத்திருவிழாவை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் இருசக்கர வாகனங்களில் ரோந்துபணி மேற்கொள்ள உள்ளனர் என எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் வழியாக வரும் 20/01/2025 திங்கட்கிழமை காலை 5:50 மணிக்கு மண்டபம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்களுக்கு சொந்த சென்றவர்கள் சென்னை விழுப்புரம் செல்வதற்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரயில் பயணிகள் மகிழ்ச்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.