Cuddalore

News September 30, 2025

காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கிய எஸ்பி

image

கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்பொழுது சிதம்பரம் நகரில் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

News September 30, 2025

கடலூர்: மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

image

கடலூர் மாவட்டம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ராஜேஷ் கண்ணன்(48). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் மனைவி ராஜலட்சுமி, அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேஷ் கண்ணன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 30, 2025

கடலூர்: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க!

News September 30, 2025

கடலூர் அருகே மனைவி திட்டியதால் தற்கொலை

image

பண்ருட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவருடைய மனைவி கீதா (34). இந்நிலையில் நேற்று செந்தில்குமார் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததை பார்த்த கீதா அவரை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த செந்தில்குமார் தன் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 30, 2025

கடலூர் மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

News September 30, 2025

கடலூர் அருகே பரிதாபம்; இளம்பெண் தற்கொலை

image

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – ஐஸ்வர்யா (32) தம்பதியினர். இந்நிலையில் நேற்று முதல் நாள் இரவு ராஜேஷ் மதுஅருந்தி வீட்டுக்கு வந்ததால், அவரை ஐஸ்வர்யா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், மனமுடைந்த ஐஸ்வர்யா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 30, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.29) இரவு 10 மணி முதல் இன்று (செப்.30) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 29, 2025

கடலூர்: காவலர்களை பாராட்டிய எஸ்பி

image

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, கடலூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது இதில், ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்றதில், சுதர்சனன் 3ம் இடம் பிடித்து ரூ.2000 பரிசு தொகையும், ஆயுதப்படை முதல் நிலை காவலர் ரஞ்சித் 8-ம் இடம் பிடித்து ரூ.1000 பரிசு தொகையும் பெற்று வெற்றி பெற்றனர். இதனை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி வாழ்த்தினார்.

News September 29, 2025

கட்லூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 18005991500 என்ற கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம். இப்பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 29, 2025

கடலூர் அருகே இரும்பு பொருட்கள் திருட்டு

image

கடலூர் அடுத்த பழையவண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் (55). பழைய பொருட்களை வாங்கி சரி செய்து விற்கும் வேலை செய்து வரும் இவரது வீட்டின் பின்புறம் வைத்திருந்த பழைய மோட்டார், போர்வெல் குழாய், கார் பேட்டரிகள் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!