Cuddalore

News October 2, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(அக்.1) இரவு 10 மணி முதல் இன்று (அக்.2) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 1, 2025

கடலூர்: மின்வாரியத்தில் வேலை APPLY NOW

image

தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. காலியிடங்கள் : 1,794
3. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
4.சம்பளம்.ரூ.18,800 – ரூ.59,900
5. கடைசி நாள் : நாளை (அக்.,2)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK<<>> செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 1, 2025

கடலூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News October 1, 2025

கடலூர்: ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த நபர்

image

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் தாஸ் (33). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி, பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மோகன்தாஸ் தான் தங்கி இருந்த அறையிலேயே இறந்து கிடந்தார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து மோகன் தாஸ் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 1, 2025

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 1, 2025

கடலூர்: மின்கம்பியாள் உதவியாளர் பணி; ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூரில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு டிசம்பரில் நடைபெற உள்ளது. இதற்கு மின்ஒயரிங் பணியில் 5 வருடம் அனுபவம் உள்ள, 21 வயது நிரம்பியவர்கள் <>skilltraining.t<<>>n என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, அதனை பூர்த்தி செய்து, துணைஇயக்குநர்/முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கடலூர் என்ற முகவரிக்கு வருகிற அக்.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 1, 2025

கடலூர்: பள்ளி மாணவி தற்கொலை

image

ரெட்டிச்சாவடி அடுத்த புதுகுப்பத்தை சேர்ந்தவர் கிருபஸ்ரீ (16). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கிருபஸ்ரீ, நேற்று வீராம்பட்டினத்தில் உள்ள தனது தோழி வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கிருபஸ்ரீ, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 1, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

image

காந்தி ஜெயந்தி விழா அக்டோபர் 2-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும், மதுபான பார்களையும் மூட வேண்டும். இதை மீறி டாஸ்மாக் கடைகளையோ, மதுபான பார்களையோ திறந்து செயல்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 1, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.30) இரவு 10 மணி முதல் இன்று (செப்.1) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

சிதம்பரம்: பஸ்ஸில் பெண்ணிடம் ரூ.50,000 திருட்டு

image

சிதம்பரம் அடுத்த வேலக்குடியை சேர்ந்தவர் ஜோதி(30). இவர் நேற்று ரூ.50 ஆயிரத்துடன் சிதம்பரத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!