Cuddalore

News January 24, 2025

கடலூர் மாவட்டத்தில் ரூ.14.67 கோடி இழப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் வழியாக 2,583 சைபர் குற்ற புகார்கள் வந்துள்ளது. அதில் 208 வழக்குகள் பதிவு செய்து, 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.14.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரூ.10.18 கோடி வங்கிகளில் முடக்கப்பட்டு, அதில் ரூ.73,29,307 திரும்ப பெற்று புகார் தாரர்களுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது என கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

News January 24, 2025

மத்திய குழுவினர் இன்று கடலூர் வருகை

image

நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்ய இன்று (24.01.2025) கடலூர் வருகை புரிய உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 24, 2025

கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

image

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் பணிக்கும், சமூகப்பணியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்ட இணையதள முகவரி www.cuddalore.tn.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News January 23, 2025

கடலூர் மாவட்ட ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினம் தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (23/01/2025) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சந்துரு, பண்ருட்டி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2025

பொதுமக்களுக்கு கடலூர் எஸ்.பி. அறிவுரை

image

சமூக வலைத்தளங்களால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தவறான நபர்கள் மூலம் உண்டாகும் நட்புகள் குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடும். அதனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு பழகும் நபர்களிடம், அவர்களது உண்மை தன்மை தெரியாமல் குடும்ப விஷயங்களையோ?, தங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News January 23, 2025

சிறுமியிடம் பழகி அத்துமீறிய இளைஞர் கைது

image

கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் வேலூரைச் சேர்ந்த அன்புகுமார் (30) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வேலூர் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் போக்ஸோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அன்புவைத் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அன்பு (எ) அன்புகுமாரை இன்று போலீசார் கைது செய்தனர்.

News January 23, 2025

கடலூரில் ஹோட்டல் முன்பு இறந்து கிடந்த இளைஞர்

image

கடலூர் பாரதி சாலையில் உள்ள அடையார் ஆனந்தபவன் வாசலில் இன்று மதியம் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த வாலிபரின் உடலை கடலூர் புதுநகர் போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

கடலூரில் விரைவில் புத்தகத் திருவிழா- ஆட்சியர்

image

கடலூரில் விரைவில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெறும். இந்த புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 100 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 22, 2025

கடந்த ஓராண்டில் 3,149 சைபர் க்ரைம் புகார்கள் பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 3,149 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் 2,583 பண மோசடி புகார்கள் மற்றும் 569 பணமில்லாத மெயில் ஐடி திருட்டு, மொபைல் போன் ஹேக் செய்வது உள்ளிட்ட புகார்கள் பதிவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!