India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய தலைமை காவலர் கலைராஜா என்பவர் சாலை விபத்து ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாலகிருஷ்ணன், அப்பாண்டராஜ் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள Credit Manager & Agriculture Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 190
3. கல்வித் தகுதி: degree & Agri related degree
4.சம்பளம்.ரூ.64,820–ரூ.93,960
5. கடைசி நாள் : 10.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 2) காலை 8.30 மணி நிலவரப்படி, சேத்தியாத்தோப்பு 2 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 1 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 0.1 மில்லி மீட்டர், கடலூர் 0.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் போலீசாருக்கு காந்தி ஜெயந்தி அன்று சிறப்பு பரிசு வழங்கி முதலமைச்சரால் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன், சிறப்பாக பணிபுரிந்ததற்காக காந்தியடிகள் காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குடியரசு தினம் அன்று முதலமைச்சரால் அவ்விருது வழங்கப்படும்.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடலைச் சேர்ந்தவர் கலையராஜா (38). வேப்பூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய இவர், கடந்த செப்.21-ம் தேதி தனது டூவீலரில் தாழநல்லுார் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் <

த.வா.க தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏ-வுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை, ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்துர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (22). இவர் நேற்று (ஆக்.1) மேல்தவர்தம்பட்டு பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது முதலை ஒன்று தாக்கியுள்ளது. இதில் கால் மற்றும் கை பகுதியில் பலத்த காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் சென்னை, நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.