India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கடலூர் சரக ஆய்வர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பில்லாலி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் 13-ம் தேதி நடிகர் சேரன் காரில் வந்தபோது தனியார் பேருந்து அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்ததாக கூறி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள், சேரன் போலீசில் புகார் அளிக்காமல் தானாக சட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநத்தத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர்(40) சவாரிக்கு உளுந்தூர்பேட்டை சென்றார். இந்நிலையில் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், கணவரை கடத்தியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை கடத்திய உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டையைச் சேர்ந்த நூர்கான் என்பவரை நேற்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (14/08/2024) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 34 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்ததும், நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு காவல்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்காக கலெக்டர் அலுவலகம் முழுவதும் மூவர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் கலெக்டர் அலுவலகம் அனைவரையும் கவரும் வகையில் மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடலூரில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகள் 4 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னைக்கும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.