India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான், பழைய நெய்வேலி, மேல்பாதி, கீழ்பாதி,வடக்கு வெள்ளூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கேரளா,திருப்பூர், உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.அவர்கள் வேலை செய்யும் இருப்பிடம் குறித்து சேகரித்து வருகின்றனர். அவர்களிடம் தொடர்பு கொண்டு தங்கள் ஓட்டு எங்களுக்கே எனவும் தங்கள் வந்து போகும் செலவை ஏற்று கொள்வதாக கூறி வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி கடலூர் திமுக கட்சியா அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரஸ்வதி வேலுச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் அடுத்து உச்சிமேடு ஊராட்சியை சேர்ந்தவர் லதா (55). இவர் நேற்று இரவு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து தகவலின் பேரில் ரெட்டிசாவடி போலீசார் மோப்பநாய் உதவியுடன் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புவனகிரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜூ, தனபதி ஆகியோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பேரணி துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக 100% சதவீதம் வாக்களிப்போம் என முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றது. இதில் வருவாய்துறையினர், மகளிர் சுய உதவி குழுவினர், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் இன்று பயிற்சி வகுப்பு தொடங்கியது.இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.5 கட்டமாக நடைபெற உள்ள நீச்சல் பயிற்சி வகுப்பில் நேற்று தொடங்கிய முதல் கட்ட பயிற்சி வகுப்பில் சுமார் 50 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் நீச்சல் குள பயிற்சியாளர்கள்,காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடலூர் மாநகர செயலாளர் மு. செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/04/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராதிகா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பொட்டா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அழகர் கோவிலில் இன்று பங்குனி மாத திங்கட்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ அழகு முத்து அய்யனார், ஸ்ரீ பூரணி அம்பாள், ஸ்ரீ பொற்கலை அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக முதுநகர் வஸந்தராயன் பாளையம் பகுதியில் இருந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்பு அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை, கண் எரிச்சல் போன்று வேறு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளனவா என மருத்துவ குழு பரிசோதனை செய்தனர்.
கடலூரில் நேற்று அமைச்சர் உதயநிதி திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக மஞ்சக்குப்பம், பாரதி சாலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் கட்சி கொடி, பேனர்களை அதிக அளவில் வைத்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார், கட்சி கொடி, பேனர்களை அதிரடியாக அகற்றினர். இதனால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவியது.
Sorry, no posts matched your criteria.