India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை கடலூர் அடுத்த வசந்தராயன்பாளையத்தில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு வந்த பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் பாஜக மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் திருமாணிக்குழியை சேர்ந்தவர் வேலு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்தது.இதுபற்றி அறிந்த சிவகாமியின் மாமனார் ராமலிங்கம் இன்று வேலுவை கத்தியால் குத்தியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த வேலு, கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும்,ஓட்டுனருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
கடலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் (ஜனதா-1) ரேஷன் கடையில், 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம், கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர், கூட்டுறவு சார்பதிவாளர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூரில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று நடந்தது. இதற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, வாக்குப்பதிவு நாள் அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னப்பன் தெரு பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில் வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி இன்று (03.04.2024) அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
விருத்தாசலம் மணிமுத்தாறு, குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன. இவை அங்குள்ள கழிவு நீர் வாய்க்கால், குப்பைகளை மேய்ந்து வீடுகளில் அருகாமையிலேயே படுத்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் வலியுறுத்தி உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூரில் மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து வெற்றிலை பாக்கு பழம் ஒரு தட்டில் சீர்வரிசை பொருட்களை மூத்த வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.
கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பார்க்க வேண்டும் அவரை வெற்றி பெற செய்தால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் மற்றவர்களை தேர்வு செய்தால் கடலூர் வீணாகி விடும்’ என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.