India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு தினம் தோறும் மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நெல் (ஏடிடி – 37) வரத்து 149.74 மூட்டை, நெல் (ஏ.எஸ்.டி – 16) வரத்து 154.64 மூட்டை என மொத்தம் 304.63 மூட்டைகள் வரத்து வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த விளை பொருட்களும் இன்று விற்பனைக்கு வரவில்லை.

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தமிழக அரசு மேற்கொண்ட மேம்பாட்டு பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இன்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, வள்ளலார் மையத்தில் மேம்பாட்டு மேற்கொள்ள தேவையான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள நிலம் தொல்லியம் முக்கியம் வாய்ந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் இன்று காலை நிலவரப்படி கொத்தவாச்சேரியில் 34 மிமீ மழையும், புவனகிரியில் 28 மி.மீ, பண்ருட்டியில் 24.6 மிமீ, அண்ணாமலை நகர் 22 மி.மீ, குறிஞ்சிப்பாடி மற்றும் விருத்தாசலத்தில் 15 மிமீ, சிதம்பரத்தில் 14.3 மிமீ, கடலூரில் 4.1 மிமீ மழை பதிவாகி உள்ளது.

கடலூர் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கான புதிய பேருந்து போக்குவரத்து சேவையினை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி ஆணையர் S. அனு IAS மற்றும் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் போக்குவரத்து துறை அலுவலர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பண்ருட்டியில் இருந்து இன்று காலை அரசு பேருந்து ஒன்று கடலூர் நோக்கி புறப்பட்டது. பண்ருட்டியில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது, எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் டிரைவர் மற்றும் 5 மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் டிரைவர் மகேஷ்குமார் (42), அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நேற்று கடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து மகேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் டிரைவர் மகேஷ்குமார் (42), அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நேற்று கடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து மகேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மஞ்சக்குப்பம், வில்வநகர், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, குண்டுசாலை ரோடு, போலீஸ் கோர்டர்ஸ், புதுக்குப்பம், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், பாரதி ரோடு, பீச்ரோடு, புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் , கூடுதல் ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் அருகே பில்லாலி பகுதியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள துறைகளை கூறினர். இதில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.