India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரங்கிப்பேட்டை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம்(50), இவர் தனது வீட்டில் பின்னால் நேற்று சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு ஒன்றை கட்டி வைத்துள்ளார். அப்போது பெய்த கனமழையினால் அதற்கு அருகே இருந்த பனை மரம் முறிந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சமபவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<

கடலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.20) இரவு 10 மணி முதல் இன்று (அக்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று (அக்டோபர் 20) தனது சமூக வலைதள பக்கத்தில், ‘தித்திக்கும் தீபஒளி திருநாளை மகிழ்ச்சியோடும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்
1 .கடலூர்- 04142-295101
2. சேத்தியாத்தோப்பு- 04144-244366
3. சிதம்பரம்-04144-238099
4. காட்டுமன்னார்கோவில்- 04144-262101
5. குறிஞ்சிப்பாடி- 04142-258370
6. பண்ருட்டி-04142-242100
7. திட்டக்குடி- 04143-255208
8. ஸ்ரீமுஷ்ணம்- 04144-245201
9. வேப்பூர்- 04143-241229
10. விருத்தாசலம்- 04143-238701
11. கடலூர் SIPCOT-04142-239242
12. நெல்லிக்குப்பம்- 04142-272399

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து நெய்வேலி கொல்லிருப்பு நோக்கி சென்ற வேன் ஒன்று நெய்வேலி சாம்பல் ஏரி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் லேசான காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.