India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரங்கிப்பேட்டை அருகே ஆவணங்குப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நேற்று மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். தகவல் அறிந்த போலீச உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத கார் ஓட்டியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் <
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட்.
தமிழகத்தில் கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை பிற்பகல் 1 மணி வரை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ‘<
கடலூரில் 3வது புத்தகத் திருவிழா, கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற மார்ச் 22-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையில் நடைபெறும். விழாவில் எழுதி முடிக்கப்பட்ட உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
கடலூர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று (மார்ச்.10) மாசி மாத ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். SHARE NOW.
உலக மகளிர் நாளையொட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் அருகே கந்தகுமாரன் கிராமத்தில் வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் குழந்தை சடலமாக மிதப்பதை பார்த்த அப்பகுதிவாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் மற்றும் புத்தூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.