India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண்ருட்டி MLA வேல்முருகன் சட்டப்பேரவையில் தெலுங்கானாவில் நடைபெற்றது போல் தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேசினார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த எம்எல்ஏ வேல்முருகன், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்றும் சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார் என்றும் தமிழுக்காக,தமிழ்நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடித்து விழமங்களத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் சங்கர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று 14 வயது சிறுவன் அவர் கடைக்கு மளிகை பொருள் வாங்க சென்றான். அந்த சிறுவனை அந்த மளிகை கடைக்காரர் உள்ளே அழைத்துக் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் மளிகை கடைக்காரரை போக்சோவின் கீழ் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
சிதம்பரம் சித்தலாப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீஃபன் என்ற கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு. அண்ணாமலை நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய ஆயுதங்களை மீட்க சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் மீது தமிழகம் முழுவதும் 27 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நடவடிக்கை.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை தாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 31.3.2025-க்குள் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை (இ. கே.ஒய்.சி.) பதிவு செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 வயது மற்றும் 14 வயது பள்ளி மாணவிகளை கடந்த 2014ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), இவரது மனைவி தமிழரசி (39) ஆகியோர் சிறுமிகளை கடத்தி சென்று,பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவ சேவை நிலையங்களில் பணிபுரிய மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர், செவிலியர் அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 16 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 24.3.2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே <
காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் மேலத்தெருவில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், இன்று மதியம் மனோகரன் (52) என்பவரை முதலை கடித்து இழுத்ததில், கை,கால் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். தற்போது முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு, இதே பகுதியில் ஒருவரை முதலை கடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற சமூக மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் <
பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.3.2025 அன்று நடக்கிறது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவுள்ளது. அதனால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE NOW
Sorry, no posts matched your criteria.