India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04142-212660) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

பெண்கள் கருவில் உள்ளது என்ன குழந்தை என்று பார்க்கும் மெஷின் வைத்திருந்தது தொடர்பாக பொயனப்பாடி கிராமத்தில் செந்தில்குமார்(40) என்பவரது வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில், மருத்துவ அதிகாரிகள் குழு நேற்று (அக்.23) நேரில் சென்று சோதனை செய்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டில் இருந்த மெஷினை மட்டும் பறிமுதல் செய்து மருத்துவ குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அருகே தச்சக்காட்டில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக நடைபெற்ற இருதரப்பு மோதலில் அப்பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், சந்திரா ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜெயராமன், சந்திரா தனித்தனியே கொடுத்த புகாரில் பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து 8 பேரை தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குழுவினரால், போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு 4 சக்கர வாகனம், 26 இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலமானது வருகிற அக்.30-ம் தேதி கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் காலை 8 மணி முதல் 10 மணி வரை வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் கலா என்கிற கலைச்செல்வி(57). இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது இடது காலில் பாம்பு கடித்தது. பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலா நேற்று (அக்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

காவேரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு 60,000 கன அடி வரை அதிகரிக்கக்கூடும். எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (அக்.23) இரவு வெளியிட்டுள்ள செய்தி குறித்து தெரிவித்துளார்.

நெய்வேலி வட்டம் 30-ஐ சேர்ந்தவர் ஆகாஷ்(23). இவரின் பெற்றோர் ஜெயக்குமார் மற்றும் சீதாலட்சுமி இருவரும் இறந்து விட்டனர். இதனால் பெற்றோர் உயிரிழந்ததால் ஆகாஷ் தன்னுடன் யாரும் இல்லை என்று மன வருத்தத்தில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீரில் மூழ்கிய இளம் நெற்பயிர்களை பாதுகாத்திடவும், நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அனுகி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (அக்.23) தெரிவித்துள்ளார். சம்பா பருவத்தில் 66,800 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Sorry, no posts matched your criteria.