India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், கடல் சார்ந்த பொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி வகுப்புகள் வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் கடலூர் அடுத்த உச்சிமேடு சமுதாயக் கூடத்தில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாமென கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள Customer Service Engineer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் <
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (04/04/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க..
கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (05.04.2025) சனிக்கிழமை கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பண்ருட்டி பகுதியில் உள்ள மண்வளம், தட்பவெப்ப நிலை ஆகிய காரணங்களால் பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கென தனி சுவை உண்டு. இத்துடன் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையை உங்க நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்!
தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி கோயம்புத்தூரில் கடந்த மார்ச்.29-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (Branch Intern)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே <
கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், வழிப்பறி கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.