Cuddalore

News September 6, 2025

கடலூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04142-293856 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 6, 2025

கடலூர்: ரூ.7 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்!

image

கடலூரில் இருந்து சிதம்பரம் வழியாக மயிலாடுதுறைக்கு திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நேற்று தனிப்பிரிவு போலீசார் சிதம்பரம்-சீர்காழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் இருந்தது ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ 600 கிராம் எடை கொண்ட திமிங்கல எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, ராஜசேகர் (28) என்பவரை கைது செய்துள்ளனர்.

News September 5, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

கடலூர் மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News September 5, 2025

கடலூர்: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

கடலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

கடலூர் சிப்காடில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

கடலூர் சிப்காட் தனியார் இரசாயனத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்ட இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் இன்று (செப்.5) உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார். பாதுகாப்புப் பணி சம்பந்தமாக தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று உரிய விசாரணை எடுப்பதாக கூறினார்.

News September 5, 2025

தொலைதுார கல்வி சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம்

image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதுாரம் மற்றும் இணையவழிக் கல்வி மையம் சார்பில் 5 இளங்கலை மற்றும் 20 முதுகலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.மேலும் 12 பட்டயப் படிப்புகள், 6 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 80 தரச் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கை அக்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

கடலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

கடலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 5, 2025

கடலூர்: 6 போலீசார்கள் பணியிடை நீக்கம்

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீசார்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் கார்த்திக் ஆகிய 6 பேரையும், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி உமா பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

News September 4, 2025

கடலூர் மக்களே.. இனி அலைச்சல் இல்லை!

image

கடலூர் மக்களே..சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <>tnurbanepay.tn.gov.in <<>>இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 4, 2025

கடலூர் மக்களே.. 10th போதும்! காவல்துறையில் வேலை!

image

கடலூர் மக்களே POLICE ஆக ஆசையா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து வரும் செப்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!