India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் 4 கோவில்களில் அபூர்வ கோலத்துடன் காட்சி தரும் 4 தெய்வங்கள் : மேலக்கடம்பூர் சிவாலயத்தில் சனி பகவான் கருட வாகனத்துடன் காட்சி தருகிறார். திருவதிகையில் நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். சிவபுரியில் நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன் காட்சி தருகிறார். வேலுடையான்பட்டில் முருகன் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவ சேவை நிலையங்களில் பணிபுரிய மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர், செவிலியர் அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 16 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே <
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
கடலூர், கேப்பர் மலை மத்தியச் சிறைச்சாலை 1865ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் ராணுவத் தளபதி பிரான்சிஸ் கேப்பரால் உருவாக்கப்பட்டது. சுமார் 180 ஏக்கர் பரப்பளவுள்ள திறந்த வெளிச் சிறைச்சாலையாக உள்ள இது தமிழ்நாட்டின் மிகப் பெரிய சிறச்சாலையாகும். உங்கள் ஊரில் உள்ள பெருமை வாய்ந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க.. தெரியாதவங்களுக்கு உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க..
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி உட்பட கிராம மக்கள், மலையடிக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் அகற்றிய முந்திரி மரங்கள் இருந்த அதே இடத்தில் மீண்டும் முந்திரிக் கன்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். பின், தடையை மீறி, முந்திரிக் கன்றுகளை நட முயன்ற பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 3ஆவது பிரமாண்ட புத்தகத் திருவிழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன. புத்தக விரும்பிகள் மற்றும் மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க..
கடலூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். மேலும் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மலையடிகுப்பத்தில் தோல் தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கைது செய்யப்பட்டார். அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் சண்முகம் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது குண்டுகட்டாக கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சட்டமன்றத்தில் தொடர்ந்து மக்களுக்காக பேசுவேன் என்றும், என்னுடைய இயல்பும் இதுதான் என்றும், இது இடையூறாக இருப்பதாக் கருதினால் தனது பதவியை தூக்கி எறியவும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) அருகே கடற்கரை கிராமமான நொச்சிகாடு, கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண் கொடுத்த நாச்சியப்ப பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு சிலை கிடையாது. வன்னி மரக்கிளையாய் பெருமாள் அருள் பாலிக்கும் ஒரு அதிசய கோவில். கண் பிரச்சனை உள்ளவர்கள் இது நிவர்த்தித்தலமாக விளங்குகிறது. கடலூரில் இருந்து நொச்சிகாடுக்கு 32, 25, தடம் எண் கொண்ட நகரப் பேருந்துகள் உள்ளன.
Sorry, no posts matched your criteria.