India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1993-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தற்பொழுது கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள், 3 கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 32 உள்வட்டம் மற்றும் 883 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உதவியாக இருக்கும்.
காவலர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த காவல் குடும்பத்தாரை கௌரவிக்கும் விதமாக, கடந்த 1993ஆம் ஆண்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த தில்லை கோவிந்தன் என்பவரின் மகன் கணேஷ் மற்றும் குடும்பத்தாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து கௌரவித்து குழந்தைக்கு பரிசு வழங்கி நலம் விசாரித்து கௌரவிக்கப்பட்டது.
கடலூர் மக்களே, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கடலூர் மாவட்டம், லால்பேட்டை அம்பேத்கர் தெருவில் புதிய நியாய விலைக்கடையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (செப்டம்பர் 6) திறந்து வைத்தார். இதில் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கலந்து கொண்டு மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்.
கடலூர் மக்களே, மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு போதுமானது. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2025 தேதிக்குள் <
கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு தேவையான குப்பை சேகரிக்கும் புதிய வாகனங்களை, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனை செல்வன், கடலூர் ஆட்சியர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்குட்பட்ட ஐயன் ஏரி புணரமைக்கும் பணியினை வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார் இன்று (செப்.06) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ சேவை முகாமினை இன்று (06.09.2025) தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04142-293856 அணுகலாம். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.