India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 14) பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. கடலூரில் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 35 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 9 முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை 15ஆம் தேதி குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னவல்லி, ராமாபுரம் ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் நாளை கண்ணாரப்பேட்டை திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை.14) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் முருகேசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா, சேத்தியாத்தோப்பில் காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் அமைந்துள்ளது. கடலூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக காணப்படும் சில்வர் பீச்சில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் விடுமுறை தினமான இன்று மாலை கடலூர் மாநகர மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் நேரத்தை கழிக்க சில்வர் பீச்சுக்கு வந்தனர். இதனால் சில்வர் பீச்சில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
மருங்கூரில் ஜூன்.19 இல் அகழாய்வுப் பணிகளை முதல்வா் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். அதில் இராசராசன் காலச் செம்புக் காசும் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவிலான இக்கண்ணாடி மணி 12.5 மி.மீ நீளமும் 8 மி. மீ விட்டமும் 0.45 கிராம் எடை உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அனைத்து பள்ளிகளின் மையத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் நேற்று (ஜூலை 13) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் இன்று வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில் கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் உட்பட 13 மாவட்டங்களுக்கு இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த மழையை தொடர்ந்து இன்றும் மழை பெய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி
விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதையடுத்து, கடலூர் மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் ராஜா தலைமையில், மாநகர மேயர் சுந்தரி ராஜா முன்னிலையில் இன்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.