Cuddalore

News July 21, 2024

மூவரை கொலை செய்த இளைஞர் ஆஸ்பத்திரியில் அனுமதி

image

காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த கமலேஸ்வரி, மகன் சுகந்தகுமார், பேரன் நிஷாந்த் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக, சங்கர் ஆனந்த் (21), ஷாகுல்அமீது (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யும்போது நடந்த தாக்குதலில், சங்கர் ஆனந்தின் இடது கை ஆள்காட்டி விரல் துண்டானது. இதனால், அவரை நேற்றிரவு போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News July 20, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (20/07/2024) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News July 20, 2024

3 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஏ.டி.ஜி.பி. ஆலோசனை

image

தமிழகத்தின் ஏ.டி.ஜி.பி.யாக சமீபத்தில் பொறுப்பேற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று கடலூரில் எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது 3 மாவட்டங்களிலும் சவாலாக இருக்கும் புதுவை மாநில மதுபானங்கள் கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து மூன்று மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

News July 20, 2024

ரௌலட்டட் வகை பானை ஓடுகள் கண்டெடுப்பு

image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 8 குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் சூழலில் நேற்று நடைபெற்ற அகழாய்வில் ரெளலட்டட் வகை பாளையங்கோடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த பானையோடுகள் சங்க காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News July 20, 2024

15 நாட்கள் நீதிமன்ற காவல்

image

கடலூர்,காராமணிக்குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல்கள் தீவைத்து எரிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை எற்படுத்தியது.குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் சங்கர் ஆனந்த்,சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News July 20, 2024

மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு – ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட 141 ஆவது ஆட்சியராக பொறுப்பேற்ற சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று நிருபர்களை சந்தித்தார். அதில் அடிப்படை வசதி, கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பேன். தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல அயராது உழைப்பேன் என கூறினார்.

News July 19, 2024

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் ஒன்றாம் கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் புயல் தூர எச்சரிக்கை காரணமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

News July 19, 2024

கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய டாக்டர். அருண் தம்புராஜ், தற்போது மாநில சுகாதாரத்துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு இன்று கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார் பொறுப்பேற்றார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

மூவர் கொலையில் 2 இளைஞர்கள் கைது

image

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்த கமலேஸ்வரி (60), இவரது மகன் சுகந்த்குமார் (40), பேரன் நிஷாந்த் (10) ஆகியோர் கடந்த 15 ஆம்  தேதி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  காராமணிக்குப்பம் சீத்தாராம் நகரை சேர்ந்த சங்கர் ஆனந்த் (21), ஷாகுல்அமீது (20) போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!