India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று (12.08.24) கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பொதுமக்கள் உதவித்தொகை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்கள் அளித்தால், அதனை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். இது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் தனசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ரேவதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாளை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்டம், கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் இன்று கள ஆய்வு செய்யப்பட்டு காவல் துறை அனுமதி பெறப்பட்டது. இதில் கடலூர் மாவட்ட தலைவர் ஞானராஜ், மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் சுதந்திர தினமான 15ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான திருமாவளவன் இன்று அறிவிப்பு விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுபோதை ஒழிப்பு மகளீர் மாநாடு நடைபெறும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கான மாபெரும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த 3 நாளாக நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்று விழுப்புரம் தளபதி சிசி அணியினரும் பண்ருட்டி அணியினரும் மோதினர். இதில் வெற்றி பெற்ற விழுப்புரம் அணிக்கு அமைச்சர் கணேசன் இன்று கோப்பை வழங்கினார்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் இராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் உதயகுமார், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான திருமாவளவன் இன்று அறிவிப்பு விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுபோதை ஒழிப்பு மகளீர் மாநாடு நடைபெறும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.