Cuddalore

News July 23, 2024

கடலூர் கடற்கரையில் கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சயர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

News July 23, 2024

வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மனு அளித்த எம்.பி

image

ஓமன் நாட்டு கடற்பகுதியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த கடலூர் முதுநகரை சேர்ந்த தனஞ்செயன் என்பவர் நீரில் மூழ்கி மாயமானார். அவரது நிலை குறித்து விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது மனைவி எழிலரசி வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் இன்று கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் கோரிக்கை மனு அளித்தார்.

News July 23, 2024

கடலூரில் முதல் முறையாக கணவர் ஆட்சியர், மனைவி ஆணையர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில்குமார் கடந்த 19ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மனைவியும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அனு ஐ.ஏ.எஸ், கடலூர் மாநகராட்சி ஆணையராக நேற்று நியமிக்கப்பட்டார். கடலூரில் கணவர் ஆட்சியராகவும், மனைவி மாநகராட்சி ஆணையராகவும் ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

News July 23, 2024

பட்ஜெட்டில் கடலூருக்கு இடம்பெறுவது என்ன ?

image

மத்திய அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. மேலும் கடலூர் மாவட்டதில் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவை மத்திய அரசு பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெறுபவை குறித்து உங்கள் கருத்து?

News July 22, 2024

கடலூர் மாநகராட்சி ஆணையராக அனு ஐஏஎஸ் நியமனம்

image

கடலூர் மாவட்ட மாநகராட்சி ஆணையராக காந்திராஜ் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது கடலூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக அனு ஐஏஎஸ் அவர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடலூர் மாநகராட்சின் புதிய ஆணையர் அனு விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

News July 22, 2024

கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூரில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 26 ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும், கூட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் 26 ஆம் தேதி காலை 10 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று அறிவித்தார்.

News July 22, 2024

இடைநிலை ஆசிரியர் தேர்வில் 849 பேர் பங்கேற்பு

image

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவதற்கான நேரடி நியமன போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 892 பேர் விண்ணப்பித்திருந்தனர். 3 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 849 பேர் எழுதினர். 43 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News July 22, 2024

நாளை மின்தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர்,அடரி, ஒறையூர் துணைமின் நிலையங்களில் நாளை(ஜூலை.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லாத்தூர்,அடரி, ஒறையூர் துணைமின் நிலையங்களுக்குட்டப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 21, 2024

கடலில் மூழ்கி 2 ஐ டி ஊழியர்கள் உயிரிழப்பு

image

சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரைக்கு இன்று சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஐ டி நிறுவனத்தில் பணிபுரியும் ஷாம் சுந்தர் (26), கோகுல் பிரசாத் (26) ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். இதையடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

News July 21, 2024

கடலூரில் ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

image

கடலூர் அஞ்சல் துறையில், கிளை போஸ்ட் மாஸ்டர், டாக் சேவாக் உள்ளிட்ட 120 காலிப் பணியிடங்கள் உள்ளன. 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் ஆக.5ஆம் தேதிக்குள் <>indiapostgdsonline.gov.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

error: Content is protected !!