Cuddalore

News April 23, 2025

கடலூர் அங்கன்வாடி பணியாளராக கடைசி வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 222 அங்கன்வாடி பணியிடங்கள், 3 குறு அங்கன்வாடி பணியிடங்கள் மற்றும் 243 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை இங்கே <>க்ளிக் செய்து<<>> பதிவிறக்கம் செய்து, இன்று (ஏப்.23) மாலை 5 மணிக்குள் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..

News April 23, 2025

கடலூர் அருகே துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது

image

காடாம்புலியூர் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் போலீசார் நேற்று வேலன்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன், விக்ரம், சந்தானபிரபு ஆகிய 3 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் பிளாஸ்டிக் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் முயல், எலி, காட்டு பன்றிகளை வேட்டையாட யூடியூபில் பார்த்து தயாரிக்கப்பட்டது எனக் கூறினர். உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News April 23, 2025

25 வருடம் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

image

மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பாரில் கடந்த 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட இருதரப்பினர் மோதலில் கைதான அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அரசு (47) என்பவர் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அரசை நேற்று மங்கலம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

News April 22, 2025

கடலூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்..

image

இந்த சம்மருக்கு கடலூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒருசில இடங்கள் இருக்கின்றது. அதில் மிக முக்கியமான இடங்களாக இருப்பவை: சாமியார் பேட்டை கடற்கரை, புனித டேவிட் கோட்டை, பிச்சாவரம் காடுகள், தேவநாதசுவாமி கோயில், புகழ்பெற்ற சில்வர் பீச், குடிநீர் ஆதாராமாக விளங்கும் வீராணம் ஏரி, திருவேந்திபுரம் கோவில் , பாடலீஸ்வரர் கோயில் ஆகியவை ஆகும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க..

News April 22, 2025

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.4.2025 அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News April 22, 2025

கடலூர் தீயணைப்பு துறையினர் எண்கள்

image

உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶ நிலைய அலுவலர் குமராட்சி – 04144-296201, ▶ நெல்லிக்குப்பம் – 04142-272399, ▶ பண்ருட்டி- 04142-242100, ▶முத்தாண்டிகுப்பம் – 04142-266166, ▶குறிஞ்சிப்பாடி- 04142-258370, ▶ விருத்தாசலம்- 04143-238701, ▶ மங்களம்பேட்டை- 04143-244360, ▶வேப்பூர்-04143-241229. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க

News April 22, 2025

கடலூரில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

image

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 25.4.2025 முதல் 15.5.2025 வரை கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறுகிறது. எனவே இப்பயிற்சி முகாமில் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் நேரில் வந்து கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News April 22, 2025

கடலூரில் 25ஆம் தேதி முதல் கோடைகால பயிற்சி முகாம்

image

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 25.4.2025 முதல் 15.5.2025 வரை கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறுகிறது. எனவே இப்பயிற்சி முகாமில் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் நேரில் வந்து கலந்துகொள்ளலாம். பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News April 22, 2025

கடலூரில் திருப்பதி பெருமாள் தரிசனம்

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தத்தை பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக தரப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலில் மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி போல் காட்சி தருகிறார் என்பது சிறப்பம்சமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 22, 2025

விருதாச்சலம் அருகே கால்வாயில் விழுந்து குடிமகன் உயிரிழப்பு 

image

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40)  என்பவர் நேற்று குடிபோதையில் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தடுமாறி தலைகுப்புற விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விருதாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கால்வாயில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!