India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மாண்டமாக இருக்கும் ஆயிரக்கால் மண்டபத்தில் எவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது தெரியுமா? இந்த மண்டபத்தில் தான் பதஞ்சலி முனிவர், பதஞ்சலி பத்ததி என்னும் நூலை இயற்றினார். இம்மண்டபத்தில் திருவாசகத்தைப் பாடிய போது இறைவனே அவர் பக்கத்திலிருந்து பிரதி எடுத்தார். பெரியபுராணம் அரங்கேறியது இங்குதான். மார்கழி, ஆணி, இரு திருவிழாக்களிலும் மகா அபிஷேகம் நடைபெறும்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28.3.2025 அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெறும் முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் சிறார்களுக்கு, முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து அதற்கான செலவின தொகை மானியமாக வழங்கப்படுகிறது. 01.04.2020க்கு பின் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். மேலும், விவரங்களுக்கு 04142-220732 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
கடலூர் விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்.மஹால் அருகே உள்ள ஏ.கே.டி. நீட் பயிற்சி மையங்களில், 100% கட்டண சலுகையில் சேர்க்கை பெறுவதற்கான திறனறி தேர்வு இன்று (மார்ச்.26) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் நீட் மறுதேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தேர்வு எழுத 6369146590, 9361165429 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.
கடலூரில் அற்புதமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள், 1. கடலூர் வெள்ளி கடற்கரை, 2. சிதம்பரம் பிச்சாவரம் காடு, 3. ஸ்ரீ முஷ்ணம் பூவராகவசாமி கோயில், 4. புவனகிரி ராகவேந்திரர் அவதரித்த தளம், 5. காட்டுமன்னார் கோவில் வீரநாராயணன் ஏரி, 6. சிதம்பரம் நடராஜர் கோயில், 7. பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டை கடற்கரை. மேலும் உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க..
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து 29.03.2025 (சனிக்கிழமை) அன்று பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்தப்படவிருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்நாதன் மகன் அஸ்வந்த் (4). கடந்த 26.1.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த முருகவேல் மகள் ரஞ்சிதா (26) என்பவர் முன்விரோதம் காரணமாக செந்தில்நாதன் மகன் அஸ்வந்தை கொலை செய்தார். இந்த நிலையில் சிறுவனை கொலை செய்த ரஞ்சிதாவுக்கு நேற்று கடலூர் ஏ.டி.ஜே. கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சோபனா தேவி உத்தரவிட்டார்.
வானிலை ஆய்வு மைய தகவலின்படி கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் கோடை காலத்தில் வெப்ப அலை தாக்குதல்கள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகரிக்கும் வெப்ப நிலையால் தலைவலி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசரகால உதவி எண். 104ஐ அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW
சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மனமுடைந்த குமார் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பையில் தான் இறந்ததற்கான காரணம் சிவராஜ்தான் என எழுதிவைக்கப்பட்ட கடிதம் இருந்தது கண்டறியப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 4 கோவில்களில் அபூர்வ கோலத்துடன் காட்சி தரும் 4 தெய்வங்கள் : மேலக்கடம்பூர் சிவாலயத்தில் சனி பகவான் கருட வாகனத்துடன் காட்சி தருகிறார். திருவதிகையில் நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். சிவபுரியில் நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன் காட்சி தருகிறார். வேலுடையான்பட்டில் முருகன் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தருகிறார்.
Sorry, no posts matched your criteria.