Cuddalore

News October 25, 2025

கடலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கடலூர், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தலைமையாசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் இன்று (25.10.2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன் உட்பட பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் உள்ளனர்.

News October 25, 2025

கடலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK HERE<<>>]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 25, 2025

சேத்தியாத்தோப்பு: 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

image

சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (39). இவர் மீது சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை கடத்திய வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது கணபதி திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கணபதி போலீசில் சிக்கினார்.

News October 25, 2025

கடலூர்: வெள்ளப்பெருக்கில் சிக்கி முதியவர் பரிதாப பலி

image

கடலூர் அருகே பெத்தாங்குப்பம் மேட்டு தெருவில் வசித்து வந்த மணிவேல் (60) என்பவர் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் தேடிய நிலையில் இன்று (அக்.25) காலை பரவனாற்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News October 25, 2025

கடலூர்: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முதல் <>www.rrbapply.gov.in <<>>என்ற இணையதளம் வாயிலாக நவ.,20 வரை விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News October 25, 2025

சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் தன்னார்வலராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

image

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, அலுவலகங்களில் சட்ட தன்னார்வலராக பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை 5.11.2025 மாலை 5 மணிக்குள் கடலூர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்ராதேவி தெரிவித்துள்ளார். https://cuddalore.dcourts.gov.in தெரிந்து கொள்ளலாம்.

News October 25, 2025

கடலூர்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கடலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <>க்ளிக் செய்து <<>>உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

News October 25, 2025

கடலூர்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

image

விருத்தாசலம் வட்டம் கு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (40), என்பவர் வீட்டில் 3 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது, சுரேஷின் உடல் அழுகிய நிலையில் நேற்று (அக்.24) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 25, 2025

கடலூர்: ஆசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்

image

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் என்பவரது மகள் ராதிகா (35). ஆலடி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ராதிகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரை காதலித்து ஏமாற்றிவிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நேற்று பள்ளி தாளாளர் மகனான பிரின்ஸ் நவீன் (37) என்பவரை கைது செய்தனர்.

News October 25, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.24) இரவு 10 மணி முதல் இன்று (அக்.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!